“செங்கோலுடன்” வடிவேலு..“வரலாறு முக்கியம்” என கூறி இம்சை அரசன் 24ம் புலிகேசி போஸ்டர் பகிர்ந்த ஜோதிமணி
சென்னை: இன்று நடைபெற்ற புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவில் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு செங்கோல் வைக்கப்பட்டது விவாதப்பொருளாகி உள்ள நிலையில், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி பேஸ்டரை பகிர்ந்து இருக்கிறார். பலரும் அந்த படத்தை பகிர்ந்து வருகிறார்கள்.
இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து இருக்கிறார். இதில் சோழர்களின் வழிப்படி, திருவாவடுதுறை ஆதீனம் இந்தியா சுதந்திரம் பெற்றப்போது நேருவிடம் வழங்கிய செங்கோல் வைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

அதன்படி நேற்று மதுரை ஆதீனத்திடம் இந்த செங்கோலை பெற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று செங்கோடுக்கு நெடுஞ்சாண்கிடையாக மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து அந்த செங்கோலை எடுத்துக்கொண்டு மக்களவைத் சபாநாயகர் இருக்கைக்கு சபாநாயகர் ஓம் பிர்லாவை அழைத்துக் கொண்டு ஏறிய மோடி, செங்கோலை அங்கு வைத்தார்.
இதற்கிடையே செங்கோல் தொடர்பாக பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களும், விமர்சனங்களும் வெளியாகின. மன்னராட்சியின் அடையாளமாக இருந்த செங்கோலை மக்களாட்சியின் சின்னமாக இருக்கும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்துவதா என்று எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பினார்கள்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை அரும்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிய பரமாசாரிய சுவாமிகள், "முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் 1947 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தும் வகையில் செங்கோல் வழங்கப்பட்டது உண்மை.
ராஜாஜியின் அழைப்பை ஏற்று ஆதீனம் சடங்கு செய்ததற்கான சான்றுகள் உள்ளன. நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டதற்கான சான்றுகளும் இருக்கின்றன. நேரு செங்கோலை வைத்து இருக்கும் புகைப்படங்கள் ஆதீன புத்தகத்தில் உள்ளன. கண்ணாடி பெட்டியில் கடந்த 75 ஆண்டுகளாக வைக்கப்பட்டு இருந்த இந்த செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட இருக்கிறது.
அரசியல் லாபத்துக்காக சடங்குகளை பொய், போலி எனவும் கூறுவது வருத்தம் தருகிறது. நீதி மாறாமல் அரசு ஆட்சி செய்வதற்காக செங்கோல் வழங்கப்படுகிறது. நீதியுடன் ஆட்சி செய்யாவிட்டால் நிச்சயம் செங்கோல் தண்டிக்கும். மவுண்ட்பேட்டனிடம் செங்கோல் கொடுத்த வாங்கப்பட்டதற்கான பதிவுகளோ புகைப்படங்களோ மடத்திடம் இல்லை.
வரலாறு முக்கியம்:) pic.twitter.com/EbI5JItuxT
— Jothimani (@jothims) May 28, 2023
நேரில் பார்த்தேன் என்றும் என்னால் சொல்ல முடியாதே. அந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்களிடம் கேட்டால் இதுபற்றி தெரியும். செங்கோல் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படும் நிகழ்வு எப்போது எங்கு நடந்தது என்றே எனக்கு தெரியாது." என்று தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் செங்கோலுடன் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை பல்வேறு தரப்பினர் விமர்சித்து மீம்களை வெளியிட்டு வருகிறார்கள்.
குறிப்பாக சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் அடித்த இம்சை அரசன் 23 ஆம் புலிகேசியின் அடுத்த பாகமாக தயாரிக்க முடிவு செய்யப்பட்டு கைவிடப்பட்ட 24 ஆம் புலிகேசி படத்தின் பழைய போஸ்டர்களை பகிர்ந்து வருகிறார்கள். அதிலும் வடிவேலு செங்கோடுடன் இருக்கிறார். இதனை கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமனி ட்விட்டரில் பதிவிட்டு "வரலாறு முக்கியம்" என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications