ராகுல் காந்திக்கே பதவி இல்லை.. எங்கள் எம்.பி பதவிகளையும் ராஜினாமா செய்வோம் - திருநாவுக்கரசர் பரபர!
சென்னை : ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துவிட்டார்கள். நாங்களும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வோம் என்று காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி எனக் கூறி, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து எம்.பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு உட்பட, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் சத்தியாகிரகம்
மோடி குறித்து கருத்து தெரிவித்ததற்காக காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ராகுல் காந்தி எம்.பி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சத்தியாகிரக போராட்டம் நடத்தும்படி காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டு இருந்தது.

காங்கிரஸ் எம்.பிக்கள்
அதன்படி ராகுல் காந்தி எம்.பி தகுதி நீக்கத்தைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு, சேலம் உட்பட 69 இடங்களில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் தொண்டர்களும், நிர்வாகிகளும் திரளாகக் கலந்து கொண்டனர். மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டத்தில் திருநாவுக்கரசர் எம்.பி., கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

யாருமே பேச முடியாது
அப்போது பேசிய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், "கள்ளம் கபடம் இல்லாத நபராக ராகுல் காந்தி உள்ளார். அதுதான் பிரச்சனை. ராகுல் காந்தி பேசும்போது மோடி அடிக்கடி தண்ணீர் குடித்தார். அவரது கைகள் நடுங்கின. பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக மான நாஷ்ட வழக்கு தொடர்ந்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது இது தான் இந்தியாவில் முதல் முறை. எம்.பி பதவியில் இருந்தும் தகுதி நீக்கம் செய்துள்ளனர். பொது மேடையில் பேசியதற்கு மான நாஷ்ட வழக்கு தொடுத்து தண்டனை கொடுத்தால் யாருமே பொது மேடையில் பேச முடியாது.

ராஜினாமா செய்வோம்
இந்த விவகாரத்தில், நியாயம் கிடைக்கும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம். ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துவிட்டார்கள். நாங்கள் மட்டும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து என்ன செய்யப் போகிறோம்? நாங்களும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வோம். பொதுக்கூட்டத்தில் பேசிய சாதாரண பேச்சிற்காக திட்ட மிட்டு பேசியதாக கூறி இது போன்ற ஒரு அவதூறு வழக்கு போடப்பட்டு பதவியை பறித்துள்ளனர். அதுவும் பேசியது கர்நாடகாவில்.. ஆனால் வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இது போன்ற வெறி உணர்ச்சியால் எம்.பி பதவியை பறிப்பது ஜனநாயகம் விரோதம்.

மோடியை வெளியேற்றும் போராட்டம்
இதுபோன்ற ஜனநாயக விரோதத்தை கண்டிக்கும் வகையில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சத்யாகிரக அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காந்தி அகிம்சை வழியிலேயே போராடி பிரிட்டிஷ்காரர்களை வெளியேற்றினார். அதுபோல காங்கிரஸின் இந்த அறவழிப்போராட்டம் மோடியை வெளியேற்றும். அமைதியாக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டால் அதையே பாவம் என்று கூறுகிறார்கள். அகிம்சை போராட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டிய அவசியம் என்ன? ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள நாட்டில் இது போன்று செய்யக்கூடாது. இது சர்வாதிகாரத்தின் உச்சம்" எனத் தெரிவித்தார்.
-
ஸ்டாலினின் கையில் அந்த சர்ப்ரைஸ் லிஸ்ட்.. திமுக துரைமுருகன் முதல் பொன்முடி வரை! 15 விஐபிகளுக்கு கிலி? -
“திருவள்ளுவர் கறுப்பா? சிவப்பா? தாடி இருந்ததா?” - பக்தவத்சலம் ஆட்சியில் நடந்த சர்ச்சை! -
கேரளா.. உள்ளே வரும் பாஜக! புதிய சர்வேயில் காங்கிரஸுக்கு ஷாக்.. அப்போ இடதுசாரிகள் நிலை என்ன? -
மக்களவையில் டென்ஷன்: சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! இன்று அரங்கேறும் அக்னிப்பரீட்சை -
அமித் ஷா பற்றி அந்த ஒரு சொல்! சுல்தான்பூர் கோர்ட்டில் ராகுல் காந்தி இன்று ஆதாரங்களை தாக்கல் செய்வாரா -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ












Click it and Unblock the Notifications