Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யார் பெரிய தலை? கதர் கட்சியில் ’கை’கலப்பு! 2 ஆக பிரிந்த நிர்வாகிகள்! டெல்லிக்கு சென்ற பஞ்சாயத்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் கலகம் வெடித்திருக்கிறது. திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட கிரிஷ் சோடங்கர் மோதல் போக்கை கையாண்டு வந்த நிலையில் செல்வப் பெருந்தகை இடையில் புகுந்து கூட்டணியை உறுதி செய்தார். இந்த நிலையில் தொகுதிகள் ஒதுக்கீடு முடிந்த நிலையில் எந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை காங்கிரஸ் மேலிடமே முடிவு செய்ய வேண்டும் என கதர் கட்சியின் ஒரு குரூப் கிளம்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சென்று கொண்டு இருந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக மோதல் வெடித்தது.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 Selvaperunthagai DMK

கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதலான கட்சிகள் வந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என திமுக சொன்னது. அதே நேரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை காரணம் காட்டி கூடுதல் தொகுதிகள் கேட்டு அடம்பிடித்தது காங்கிரஸ்.

திமுக காங்கிரஸ் கூட்டணி

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் காங்கிரஸ் வென்றது. அதனால் இந்த முறை 40 தொகுதிகளை கேட்டதோடு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட எம்எல்ஏக்களும் எம்பிக்களும் போர்க்கொடி தூக்கியதால் கடைசி வரை பேச்சுவார்த்தை முடியுமா அல்லது உடையுமா? என சென்றது. தொடர்ந்து ப.சிதம்பரம், களத்தில் இறங்கி சோனியா காந்தி மூலமாக கூட்டணியை இறுதி செய்தார்.

கிரிஷ் சோடங்கர்

அதே நேரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்த கிரிஷ் சோடங்கர் 35 தொகுதிகள் வேண்டுமென அடம் பிடித்தார். ஒரு வழியாக 28 தொகுதிகள் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இருந்தாலும் இந்த விவகாரத்தில் கிரிஸ் சோடங்கருக்கும், செல்வபெருந்தகைக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. இதற்கிடையே 28 தொகுதிகள் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் அதில் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற பேச்சுவார்த்தைகள் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்திருக்கிறது.

தொகுதி பங்கீடு சர்ச்சை

அப்போது கூடுதல் தொகுதிகளை கேட்டதால், திமுக தோல்வி அடைய வாய்ப்பு உள்ள தொகுதிகளை நமக்கு தள்ளிவிடலாம் எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறி இருக்கிறார். அதே நேரத்தில் செல்வப் பெருந்தகையின் ஆதரவாளர்கள் திமுகவின் அமைச்சர்கள் பலமாக இருக்கிறார்கள். அதிமுக நிர்வாகிகள் பலவீனமாக இருக்கும் தொகுதிகளில் நாம் போட்டியிட்டால் வெற்றி பெறலாம். எனவே திமுக கொடுக்கும் தொகுதிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறியதாக சொல்லப்படுகிறது.

கார்த்தி சிதம்பரம்

இதற்கிடையே தனியாக சர்வே நடத்திய கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலை கொடுத்து இருக்கிறார்கள். அந்த பட்டியலை வைத்து தான் கிரிஸ் சோடங்கர் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறார். அதே நேரத்தில் செல்வப் பெருந்தகை திமுக கொடுக்கும் தொகுதிகளில் போட்டியிடலாம் என கூறி இருக்கும் நிலையில் இருதரப்பிலும் மோதல் வெடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

டெல்லி காங்கிரஸ்

அதுமட்டுமல்லாமல் முக்கிய தலைவர்கள் பலரும் தங்கள் ஆதரவாளர்களுக்கு சீட்டு கேட்டு செல்வப் பெருந்தகையை நெருங்கி வருகின்றனர். இதனால் கிரிஷ் சோடங்கர் தான் கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த பஞ்சாயத்து டெல்லி வரை சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+