இதுக்கெல்லாம் 2024 தேர்தலில் பரிசு இருக்கு! அமலாக்கத்துறை ரெய்டு.. செல்வப்பெருந்தகை விமர்சனம்
சென்னை: தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை திடீர் ரெய்டை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து வருகின்றன. அந்த வகையில் தேசிய தலைவர்கள் பங்கேற்கும் இரண்டாவது கூட்டம் இன்று பெங்களூரில் நடைபெறுகிறது. இதில் திமுகவும் பங்கெடுக்கிறது. இந்நிலையில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. கடந்த 1996 முதல் 2001ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது நில அபகரிப்பில் ஈடுபட்டதாக பொன்முடி மீது குற்றச்சாட்டு இருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அமலாக்கத்துறை திடீர் ரெய்டை மேற்கொண்டிருக்கிறது. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி மற்றும் விழுப்புரத்தில் உள்ள அவரது வீடுகள் என 5 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது. மட்டுமல்லாது இவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம சிகாமணி வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது.
ஏற்கெனவே கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி இதேபோல அமலாக்கத்துறை திடீரென செந்தில் பலாஜியின் வீட்டில் ரெய்டு நடத்தியது. இதனையடுத்து அன்று இரவே அவரை கைது செய்யவும் முயன்றது. ஆனால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
இருப்பினும், அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர். அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அறிவுறுத்தியது. இது அமலாக்கத்துறைக்கு சாதகமாக அமைந்தது. இந்நிலையில், தற்போது இரண்டாவது ரெய்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை,
"ஆளுநரின் கருத்துகளுக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி செயல்பட்டு வருவதால் மத்திய அரசு இப்படியான பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதனை தமிழக மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதற்கு 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு தக்க பரிசு கிடைக்கும்" என்று கூறியுள்ளார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications