Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை!
சென்னை: தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை திடீர் உயர்வால் வீடு கட்டுவோர் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமானத்திற்கான மூலப் பொருட்களின் விலை உயர்வால் சிமென்ட் விலையும் உயர்ந்திருக்கிறது.
தமிழகத்தில் சொந்த வீடு கட்டக் கனவு காணும் நடுத்தர மக்களுக்குப் பேரிடியாக, அத்தியாவசிய கட்டுமானப் பொருட்களான ஜல்லி, எம்.சாண்ட் (M-Sand) மற்றும் பி.சாண்ட் (P-Sand) ஆகியவற்றின் விலை திடீரெனக் கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்தத் திடீர் விலையேற்றம் தங்களின் மாதாந்திர பட்ஜெட்டைத் தலைகீழாக மாற்றிவிடும் என வீடு கட்டுவோரும், கட்டுமான நிறுவனங்களும் பெரும் கவலையடைந்துள்ளனர்.
கட்டுமானப் பணிகளுக்கு மிக முக்கியத் தேவையான மூன்று பொருட்களின் விலையும் யூனிட்டுக்கு தலா ரூ. 500 வரை அதிரடியாக உயர்ந்துள்ளது.
ரூ 3300-க்கு விற்கப்பட்ட ஒரு யூனிட் ஜல்லி ரூ 500 உயர்ந்து ரூ 3800-க்கும், ரூ 4000 விற்கப்பட்ட ஒரு யூனிட் எம்.சாண்ட் ரூ 500 உயர்ந்து ரூ 4500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரூ.5000-க்கு விற்கப்பட்ட ஒரு யூனிட் பி.சாண்ட் ரூ 500 உயர்ந்து ரூ 5500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விலையும் உயரும் அபாயம்!
ஜல்லி மற்றும் மணல் விலையேற்றம் மட்டுமல்லாமல், இவற்றை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, வரும் நாட்களில் சிமெண்ட் உள்ளிட்ட இதர கட்டுமானப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் துறை சார்ந்த வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
பின்னடைவில் கட்டுமானத் துறை: ஏற்கெனவே பல்வேறு காரணங்களால் கட்டுமானத் துறை மந்தநிலையைச் சந்தித்து வரும் சூழலில், இந்தத் திடீர் விலை உயர்வு பெரும் சுமையாக மாறியுள்ளது. அடித்தளப் பணிகள் மற்றும் பூச்சுப் பணிகளுக்கான செலவு பல மடங்கு அதிகரிக்கும் என்பதால், நடுத்தர மக்களின் சொந்த வீட்டுக் கனவு தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே, இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், கட்டுமானப் பொருட்கள் தங்கு தடையின்றிக் நியாயமான விலையில் கிடைக்கவும் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக கனிமவளத் துறை அமைச்சர் டி.கே. பிரபு கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூறியிருப்பதாவது: மணல், எம் சாண்ட் தட்டுப்பாடு என்ற பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. மாநில அளவில் குவாரிகளை ஆய்வு செய்து வருகிறோம்.
விதிமீறல் குறித்து ஆய்வுக்குப் பின் தீர்வு காணப்படும். கிரானைட் குவாரிகள் திறப்பது தொடர்பாக பகுப்பாய்வு செய்து வருகிறோம். மதுரை உள்பட தமிழகத்தில் பல இடங்களில் கனிமவளக் கொள்ளை நடந்துள்ளது குறித்து ஆய்வு நடத்தியுள்ளோம். குவாரி ஊழல் தொடர்பான அறிக்கைக்காக காத்திருக்கிறேன். எல்லா குவாரிகளிலும் ஆய்வு நடக்கும் என தெரிவித்திருந்தார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications