சிறை தண்டனையிலிருந்து தற்காலிகமாக தப்பினார் கோவை கலெக்டர்.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருப்பம்
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் கோவை மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி, வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த 74 வயது முதியவர் ஜான் சாண்டி என்பவருக்கு சொந்தமான நிலத்தின் பட்டா ஆவணத்தில் சட்ட விரோதமாக சேர்க்கப்பட்டுள்ள பெயரை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி ஜான் சாண்டி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் ஆகியோருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், கோவை வடக்கு தாலுகா தாசில்தார் மணிவேலுக்கு ஒரு மாத சிறை தண்டனையும், ஒரு மாத ஊதியத்தை அபராதமாகவும் விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இதேபோல நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத திருப்போரூர் தாசில்தார் வெங்கட்ராமன் மற்றும் கோவை ஆதிதிராவிடர் நல சிறப்பு தாசில்தார் ஸ்ரீமாலதி, மதுக்கரை தாசில்தார் சத்யன், வெள்ளலூர் கிராம நிர்வாக அதிகாரி விஜயகுமார் ஆகியோருக்கு தலா ஒரு மாத சிறை தண்டனையும், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி வேல் முருகன் தீர்ப்பளித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து கோவை முன்னாள் ஆட்சியர் உள்ளிட்ட 8 அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் செந்தில் குமார் ராமமூர்த்தி, தமிழ்செல்வி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்ற உத்தரவை தாமதமாக அமல்படுத்தியதாக கூறி தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை கேட்ட நீதிபதிகள், அதிகாரிகளுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மேல்முறையீட்டு மனுவுக்கு 4 வாரத்தில் பதிலளிக்க சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications