30 அடி பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. குன்னூரில் பலியான 8 பேர்.. நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: நீலகிரி மாவட்டம் குன்னூரில் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து சுற்றுலா பஸ் விபத்துக்குள்ளானதில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, பலியானவர்கள், படுகாயமடைந்தவர்கள், லேசான காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.
தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தை சேர்ந்த பலரும் சுற்றுலா தளங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் தான் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் அதிகமாக வந்து செல்கின்றனர்.

இதனால் தற்போது ஊட்டியில் தற்போது சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் தான் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சுற்றுலா பஸ்சில் ஊட்டிக்கு சென்றனர். பஸ்சில் மொத்தம் 59 பேர் இருந்தனர்.
இந்த பஸ் குன்னூர் -மேட்டுப்பாளையம் மரப்பாலம் அருகே வந்தது. அப்போது வளைவில் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தடுப்புச்சுவரில் மோதி 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதுபற்றி அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள், போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 8 பேர் பலியாகினர்.
மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் இன்னும் சிலர் காயமடைந்துள்ளனர். இவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா சென்று வீடு திரும்பியபோது பஸ் விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு நிதியுதவியையும் அறிவித்துள்ளார். அதன்படி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் என நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் இந்த விபத்துக்கு ஆளுநர் ஆர்என் ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பிற அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications