சென்னை மேடவாக்கம் மேம்பாலம்.. தள்ளுவண்டி கடைகளில் மாமூல்.. வீடியோவில் சிக்கிய போலீசுக்கு வில்லங்கம்
சென்னை: சென்னையை மேடவாக்கம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தள்ளுவண்டிக் கடைகள், உணவுக் கடைகள், சிக்கன் பக்கோடா கடை உள்பட பல்வேறு சிறிய கடைகளில், இருசக்கர வாகனத்தில் வரும் ஒரு காவலர் மாமூல் வாங்குவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி விமர்சனத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்கம் அளித்த தாம்பரம் மாநகர காவல்துறை, 2 பேர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாக கூறியுள்ளது.
சென்னை மற்றும் தாம்பரம் உள்பட பல்வறு பகுதிகளில் நடைபாதைகளில் தள்ளுவண்டிக் கடைகள், உணவு கடைகள், ஐஸ் விற்பது, காய்கறி விற்பது, சாலையை ஆக்கரமித்து கடைகளை வைத்திருப்பது, கடைகளில் இரவு நேரம் நீண்ட நேரம் வைத்திருப்பது போன்றவற்றை பார்த்திருப்பீர்கள். பொதுவாக சாலையில் ஆக்கிரமித்து கடைகள் வைப்பது சட்டப்படி குற்றம் ஆகும். இப்படிப்பட்ட கடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தால், விபத்து அபாயம் ஏற்படும் என்றால் போலீசார் உடனே அகற்றிவிடுவார்கள்.

அதேநேரம் ஒரு சில பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரம் கருதி அவர்கள் மீது பெரிய நடவடிக்கை எடுப்பது இல்லை.. ஏனெனில் சாலையோரம் எந்தநிரந்தர கட்டமைப்பும் இன்றி, சிறிய அளவு இடத்தில் தான் கடைகள் வைத்திருப்பார்கள். அவர்களின் அன்றாட வருமானமும் மிக குறைவாகவே இருக்கும்.
இவர்களை நம்பி குடும்பங்கள் இருக்கும்.. எனவே என்ன தான் சட்டப்படி தவறு என்றாலும், நெரிசல் இல்லாத பகுதிகளில் போலீசார் மனிதாபிமானத்துடன் விட்டுவிடுவார்கள்.. அதேநேரம் ஒரு சில காவலர்கள் அப்படி கடை வைத்துள்ளவர்களிடம் மாமூல் வசூலிப்பதும் உண்டு. அப்படிதான் மேடவாக்கத்தில் நடந்ததாக குற்றச்சாட்டு உள்ளது.
சென்னை மேடவாக்கம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தள்ளுவண்டிக் கடைகள், உணவுக் கடைகள், சிக்கன் பக்கோடா கடை உள்பட பல்வேறு சிறிய கடைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைக்காரர்களிடம் காவலர்கள் சிலர், தினமும் மாமூல் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில நேற்று முன்தினம் இரவு மேடவாக்கம் பகுதியில் கடைக்காரர்களிடம் மோட்டார் சைக்கிளில் வரும் போலீசார் மாமூல் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.
குறிப்பிட்ட வீடியோவில் சீருடையில் இருசக்கர வாகனத்தில் வரும் ஒரு காவலர், கடை வியாபாரி ஒருவரிடமிருந்து இடது கையால் பணத்தை வாங்குகிறார். பின்னர் அதை தனது சட்டைப் பையில் போடும் காட்சி பதிவாகி இருந்தது.
இந்த வீடியோ செய்தி ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது. இது தொடர்பான முதல்கட்ட விசாரணையில், அவர்கள் மேடவாக்கம் காவல் நிலைய போலீஸ் ஏட்டு திருமுருகன் மற்றும் காவலர் வெங்கடேசன் என்பது தெரியவந்தது. இது குறித்து தாம்பரம் மாநகர காவல்துறை உயர் அதிகாரிகள் அளித்த விளக்கத்தில், 2 பேர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications