கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து.. சென்னைக்கு வந்த பயணிகள் யார்.. இதோ பெயருடன் லிஸ்ட்!
சென்னை: சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கியுள்ள நிலையில், அதில் பயணிக்கும் பயணிகள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தா புறநகரில் உள்ள ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 3.20 மணிக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கிளம்பியது. இந்த ரயில் ஒடிசா, ஆந்திரா வழியாகச் சென்னை வந்தடையும்
12841 எண்ணைக் கொண்ட இந்த ரயில் நாளைய தினம் மாலை சென்னைக்கு வர இருந்தது. இன்று இந்த ரயில் பாலசோர் மாவட்டத்தில் வரும் போது விபத்தில் சிக்கியுள்ளது. பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த ரயில் தடம் புரண்ட நிலையில், அங்கே இருந்த சுமார் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டதாகக் கூறப்படுகிறது. இந்த ரயில் தடம் புரண்டிருந்த நிலையில், யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் அங்குத் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
அதாவது கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் அங்கு வந்த நிலையில், ரயிலை உரிய நேரத்தில் நிறுத்த முடியாத நிலையில், அந்த ரயிலும் மோதியுள்ளது. அந்த ரயிலின் அதன் 3-4 பெட்டிகள் தடம் புரண்டன.
இதற்கிடையே தற்போது மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மூன்றாவதாக மற்றொரு சரக்கு ரயிலும் அதில் மோதியுள்ளதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்குத் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ள நிலையில், காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது. இரவு நேரம் என்பதாலும் வனப்பகுதி என்பதாலும் மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்த ரயிலில் பயணித்தோரின் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரயிலில் முன்பதிவு செய்து பயணித்தோர் குறித்த தகவல்களை அறிய இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேநேரம் முன்பதிவு செய்யாத பயணிகளுடன் சேர்த்து எத்தனை பேர் ரயிலில் சென்னக்கு வந்தனர் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
மேலும், இந்த ரயில் விபத்து தொடர்பாகத் தமிழ்நாடு அரசு உதவி எண் அறிவித்துள்ளன. 044 2859 3990, 94458 69843 ஆகிய தொலைப்பேசி எண்களில் தகவல் அறியலாம். மேலும், ரயில் விபத்து தொடர்பாக உதவி பெற 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications