டாப்பில் சென்னை.. தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. 24 மணிநேரத்தில் எத்தனை பேர் பாதிப்பு தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மெல்ல அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 158 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2019ல் சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு 2021 வரை ஒட்டுமொத்த உலக நாடுகளையும் முடக்கி போட்டது. அதோடு பல லட்சம் மக்கள் கொரோனாவால் பலியான நிலையில் பல கோடி பேர் நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தனர்.
இதையடுத்து 2021க்கு பிறகு இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது சரிய தொடங்கிய நிலையில் தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதற்கு கொரோனா ஓமிக்ரான் வைரஸின் மாறுபாடு கொண்ட ஜேஎன்.1 வைரஸ் தான் காரணமாகும். குறிப்பாக இந்தியாவில் கேரளாவில் தினசரி பாதிப்பு என்பது 200யை கடந்து உள்ளது.

தமிழ்நாட்டிலும் படிப்படியாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஒற்றைப்படையில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குறித்த விபரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 344 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 14 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலாக 3 பேர், நீலகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தலா 2 பேர், தர்மபுரி, கன்னியாகுமரி, திருவள்ளூா் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 158 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில் கடந்த 24 மணிநேரத்தில் 15 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications