சென்னையில் கொரோனா உறுதியான தொழிலாளி.. திருப்பத்தூர் வந்தவரை காண மக்கள் கூடியதால் பரபரப்பு
சென்னை: சென்னையில் கொரோனா பாதித்த நபர் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மிட்டூர் அருகேயுள்ள பலப்பல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (55). இவர் சென்னையில் கட்டுமான பகுதியில் வேலை செய்து வந்துள்ளார்.

அவருக்கு சென்னையில் கொரோனா ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பியிருந்த நிலையில் நேற்று அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது.

உடனடியாக குறிப்பிட்ட நபரை பல இடங்களில் தேடியும் அவர் எங்கும் கிடைக்கவில்லை. அவருடைய செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவருடைய சொந்த மாவட்டமான திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை திருப்பத்தூர் பஸ் நிலையம் வழியாக அவர் செல்வதை அறிந்து போலீசார் அவரை லாவகமாக பிடித்து வைத்து உடனடியாக சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவல் காட்டு தீ போல் திருப்பத்தூர் நகரம் முழுவதும் பரவியது. தீடீரென அவரைப் பார்க்க பொதுமக்கள் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அவர் நடந்து சென்ற திருப்பத்தூர் நகர மெயின் ரோடு முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

பிறகு மெயின் ரோடில் உள்ள பயணியர் விடுதி அருகே அவர் உட்கார வைக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.












Click it and Unblock the Notifications