கொரோனா நிவாரணம்.. முதல் தவணையாக ரூ.2,000 வழங்கும் திட்டம்.. இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்..!
சென்னை: கொரோனா நிவாரணமாக பொதுமக்களுக்கு ரூ.2,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
கொரோனா நிவாரணமாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4,000 வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து திமுக அமோக வெற்றிபெற்று கடந்த7-ம் தேதி முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன் கொரோனா நிவாரண தொகை வழங்கும் திட்டத்துக்கு கையெழுத்திட்டார். அதன்படி முதல் தவணையாக இம்மாதம் ரூ.2,000 வழங்கப்படவுள்ளது. இதற்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்குகிறது.
தமிழகம் முழுவதும் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள 2.07 கோடி பேருக்கு இந்த நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் இன்று நண்பகல் நடைபெறுகிறது.
இதனிடையே கொரோனா நிவாரணத் தொகையை பெறுவதற்காக ஒரே நேரத்தில் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் குவிவதை தடுக்கும் நோக்கில் பணம் கொடுக்கப்படும் தேதி, நேரம் , உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் ரூ.2,000 பணம் பெற்றுக் கொள்ளலாம்.
மாவட்டந்தோறும் வட்ட அளவில் வரை ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு நிவாரணத் தொகை முறையாக சென்று சேருகிறதா என்பதை கண்காணிக்க உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ரூ.2,000 பணத்தை நான்கு 500 ரூபாய் தாள்களாகவோ அல்லது ரூ.2,000 தாளாகவோ வெளிப்படையாக கொடுக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications