கொரோனா நிவாரணம்.. முதல் தவணையாக ரூ.2,000 வழங்கும் திட்டம்.. இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்..!
சென்னை: கொரோனா நிவாரணமாக பொதுமக்களுக்கு ரூ.2,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
கொரோனா நிவாரணமாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4,000 வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து திமுக அமோக வெற்றிபெற்று கடந்த7-ம் தேதி முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன் கொரோனா நிவாரண தொகை வழங்கும் திட்டத்துக்கு கையெழுத்திட்டார். அதன்படி முதல் தவணையாக இம்மாதம் ரூ.2,000 வழங்கப்படவுள்ளது. இதற்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்குகிறது.
தமிழகம் முழுவதும் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள 2.07 கோடி பேருக்கு இந்த நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் இன்று நண்பகல் நடைபெறுகிறது.
இதனிடையே கொரோனா நிவாரணத் தொகையை பெறுவதற்காக ஒரே நேரத்தில் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் குவிவதை தடுக்கும் நோக்கில் பணம் கொடுக்கப்படும் தேதி, நேரம் , உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் ரூ.2,000 பணம் பெற்றுக் கொள்ளலாம்.
மாவட்டந்தோறும் வட்ட அளவில் வரை ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு நிவாரணத் தொகை முறையாக சென்று சேருகிறதா என்பதை கண்காணிக்க உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ரூ.2,000 பணத்தை நான்கு 500 ரூபாய் தாள்களாகவோ அல்லது ரூ.2,000 தாளாகவோ வெளிப்படையாக கொடுக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications