தொடர்ந்து கட்டுக்குள் இருக்கும் கொரோனா.. தமிழகத்தில் சரியும் கிராப்.. இன்று 1707 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று 1707 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 764989 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video

காற்று மாசுபாடு உள்ளிட்ட காலநிலை மாற்றம், மழை காலம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு முழுக்க கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ஆனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தினசரி கொரோனா கேஸ்கள் தமிழகத்தில் 2000க்கும் குறைவாகவே வருகிறது.

இன்று
தமிழகத்தில் இன்று 1707 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 764989 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 2251 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக இதுவரை 739532 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

எத்தனை பேர்
13907 பேர் தமிழகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். 19 பேர் தமிழகத்தில் இன்று கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். 11550 பேர் தமிழகத்தில் இதுவரை கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்

சென்னை
சென்னையில் இன்று 471 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தமாக 210095 பேருக்கு இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று கோவையில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 46874 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று செங்கல்பட்டில் 119 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 46294 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

டெஸ்ட் எண்ணிக்கை
11333206 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று 67115 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இன்று 66365 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 11049131 பேர் தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications