மிக மோசமான நிலை.. ஒரே நாளில் 4807 கொரோனா கேஸ்கள்.. தமிழகத்தில் 165714 பேர் இதுவரை பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று 4807 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 1,65,714 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா கட்டுக்கடங்காத வேகத்தில் பரவி வருகிறது. தினசரி கேஸ்கள் 4500ஐ தாண்டி வருகிறது. பல்வேறு லாக்டவுன் போடப்பட்ட பின்பும் கூட கேஸ்கள் உயர்ந்து வருகிறது.
சென்னையில் மட்டும் கேஸ்கள் கொஞ்சம் கட்டுக்கள் வந்துள்ளது. சென்னையில் இன்று 1219 பேருக்கு கொரோனா பாதிப்பு. சென்னையில் மொத்த பாதிப்பு 84598 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் பலி எண்ணிக்கை
இதுவரை இல்லாத அளவு இன்று 88 பேர் தமிழகத்தில் பலியாகி உள்ளனர். சென்னையில் மட்டும் 31 பேர் பலியாகி உள்ளனர். மதுரையில் 9 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 2403 பேர் பலியாகி உள்ளனர்.

என்ன காரணம்
தமிழகத்தில் இன்று 3049 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 1,13,856 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 49450ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று அதிக டெஸ்ட் செய்யப்பட்டதே அதிக கேஸ்கள் வர காரணம் என்கிறார்கள்.

இன்று சோதனை
இன்று 48195 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. 1879499 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 47179 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 1804177 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது.

வேறு எங்கு
சென்னைக்கு அடுத்து இன்று திருவள்ளூர் 370 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 8702 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று மதுரையில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 8044 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று செங்கல்பட்டில் 323 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 9360 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications