மீண்டும் வேகம் எடுக்கிறது.. ஒரே நாளில் 639 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் 11000ஐ தாண்டிய பாதிப்பு!
தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11224 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக 500க்கும் குறைவான கேஸ்கள் வந்தது.
ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை மீண்டும் 500ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து அசத்தும் முகேஷ்.. 6.5 ஆயிரம் கோடி.. ஜியோவின் 1.34% பங்கை வாங்கிய ஜெனரல் அட்லாண்டிக்
மொத்த பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11224 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 480 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,750 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11224 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 634 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் பாதித்த 11, 224 பேரில் 4, 172 பேர் குணமடைந்துள்ளனர்.
பலி எண்ணிக்கை
தமிழகத்தில் இன்று 4 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. இன்று அரியலூரில் 5 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 353 பேருக்கு கொரோனா உள்ளது. இன்று செங்கல்பட்டில் 28 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 498 பேருக்கு கொரோனா உள்ளது. கடலூரில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 417 பேருக்கு கொரோனா உள்ளது.
கள்ளக்குறிச்சி நிலை
கள்ளக்குறிச்சியில் இன்று 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 95 பேருக்கு கொரோனா உள்ளது. காஞ்சிபுரத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 186 பேருக்கு கொரோனா உள்ளது. மதுரையில் இன்று 10 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 160 பேருக்கு கொரோனா உள்ளது. நாகப்பட்டினத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 50 பேருக்கு கொரோனா உள்ளது.
திருவண்ணாமலையில் நிலை என்ன
திருவள்ளூரில் இன்று 18 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 546 பேருக்கு கொரோனா உள்ளது. திருவண்ணாமலையில் இன்று 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 151 பேருக்கு கொரோனா உள்ளது. தூத்துக்குடியில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 70 பேருக்கு கொரோனா உள்ளது. திருநெல்வேலியில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 194 பேருக்கு கொரோனா உள்ளது.