7 நாட்களுக்கு பின் தமிழகத்தில் கொரோனா மீண்டும் வேகம்.. ரேபிட் டெஸ்டில் பாசிட்டிவ் இல்லை.. ஆனாலும்!?
தமிழகத்தில் 7 நாட்களுக்கு பின் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் 7 நாட்களுக்கு பின் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஏப்ரல் 12ம் தேதிக்கு பிறகு இப்போது மீண்டும் தமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைந்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டு வந்த கொரோனா மீண்டும் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. இன்று தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தனை நாட்கள் தமிழகத்தில் கொரோனா கொஞ்சம் தீவிரம் குறைந்து இருந்தது.
ஆனால் இன்று மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரித்துள்ளது. ஒரே ஆறுதல் இன்று கொரோனா காரணமாக வரும் தமிழகத்தில் பலியாகவில்லை.
ஒரே நாளில் 50 பேர்.. சென்னையில் படுதீவிரம் எடுத்த கொரோனா.. 285 பேருக்கு பாதிப்பு.. என்ன நடந்தது?
மீண்டும் வேகம்
தமிழகத்தில் 7 நாட்களுக்கு பிறகு மிக வேகமாக கொரோனா பரவ தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி 77 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அதேபோல் ஏப்ரல் 11ம் தேதி 58 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அதன்பின் ஏப்ரல் 12ம் தேதி ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அதன்பின் தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா வேகம் குறைய தொடங்கியது.
வேகம் குறைந்தது
முக்கியமாக ஏப்ரல் 13ம் தேதி 98 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அதன்பின் ஏப்ரல் 14ம் தேதி 31 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. ஏப்ரல் 15ம் தேதி 38 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அதன்பின் மிக முக்கியமாக ஏப்ரல் 16ம் தேதிதான் மிக குறைவாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஏப்ரல் 16ம் தேதி மிக குறைவாக 25 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
மோசமான நிலை
ஆனால் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் வேகம் எடுத்தது.ஏப்ரல் 17ம் தேதி 56 பேருக்கு கொரோனா ஏற்பட்டது . ஏப்ரல் 18ம் தேதி 49 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் 7 நாட்களுக்கு பின் மீண்டும் இன்று 105 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இரட்டை இலக்கங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் இன்று மீண்டும் மூன்று இலக்கத்தை தமிழகம் அடைந்துள்ளது.
பாசிட்டிவ் இல்லை
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் தமிழகத்தில் ராபிட் கிட் மூலம் கொரோனா சோதனை வேகமாக செய்யப்பட்டு வருகிறது . இன்று மட்டும் 5840 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில் பலர் ராபிட் டெஸ்ட் செய்யப்பட்ட நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக இதுவரை 40876 கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 35741 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.
ராபிட் டெஸ்ட் ரிசல்ட்
இன்று கொரோனா ராபிட் சோதனை எதிலும் கொரோனா பாசிட்டிவ் என்று வரவில்லை. அதனால் ராபிட் டெஸ்ட் காரணமாக இன்று வேகமாக வந்த ரிசல்ட் மூலம் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பது உறுதியாகிறது. சாதரணமாக செய்யப்பட பிசிஆர் டெஸ்ட் மூலம்தான் புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வேகம் குறையவில்லை என்று புலனாகிறது.
கொரோனா குறையவில்லை
இதனால் தமிழகத்தில் கொரோனா குறையவில்லை. மாறாக வேகம் எடுத்துள்ளது என்பது தெரிகிறது. தமிழகம் கொரோனாவை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்படுத்துகிறது. நமது மாநிலத்தில் கிராப் கீழே போக தொடங்கி உள்ளது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கிராப் உயர தொடங்கி உள்ளது. இதனால் தமிழகம் எப்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீளும் என்ற கேள்வி எழுந்துள்ளது.