நான் எப்படில்லாம் வருவேன் தெரியுமா.. குட்டிப் பாப்பாவின் கொரோனா வார்னிங்!
சென்னை: கொரோனாவைரஸ் குறித்த விழிப்புணர்வு குட்டிப் பசங்க வரைக்கும் பக்காவா இருக்குங்க. அந்த வகையில் ஒட்டுமொத்த சமுதாயமும் விழிப்புணர்வுடன் இருக்கிறது என்றுதான சொல்ல வேண்டும்.
Recommended Video
கொரோனாவைரஸிடம் சிக்கி உலக நாடுகள் எல்லாம் நடுங்கிக் கொண்டுள்ளன. இந்தியாவும் என்னெவெல்லாமோ செய்து போராடிக் கொண்டுள்ளது. மக்களும் தங்களது முழு ஒத்துழைப்பை அளித்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க முயற்சித்துக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் வீடுகளுக்குள்ளேயே அடைபட்டிருக்கும் வாண்டுகளும், குட்டீஸ்களும் விதம் விதமாக பொழுது போக்கிக் கொண்டுள்ளனர். அதில் பலருக்கும் கொரோனாவைரஸ் குறித்த விழிப்புணர்வு ஓரளவுக்கு இருக்கிறது என்பது ஆச்சரியமானது. ஆனால் இதற்கெல்லாம் முக்கியக் காரணம் அவர்களது பெற்றோர்களும், தாத்தா பாட்டிகளும்தான்.
கொரோனா குறித்து தெளிவாக விளக்கிச் சொல்லியிருப்பதால் வெளியில் போகக் கூடாது என்பதை தெரிந்து வைத்துள்ளனர் குட்டிப் பசங்க. அப்படி ஒரு குட்டிப் பாப்பாதான் நம்ம தனுஸ்ரீ. நெல்லை மாவட்டம் பனகுடியைச் சேர்ந்த குட்டிச் செல்லம். யுகேஜி போறாங்களாம். அழகாக கொரோனா போல டிரஸ் போட்டுக் கொண்டு கொரோனா விழிப்புணர்வு குறித்து லெக்சர் கொடுத்திருக்கிறார்.
வாய், கண்ணு, மூக்கு வழியா நான் வருவேன் என்று கூறி கை சுத்தம் பற்றி அழகாக விளக்குகிறார் இந்த குட்டிப் பாப்பா.. நீங்களும் கேளுங்க.. வீட்டை விட்டு வெளியே வராமல் கொரோனாவிடமிருந்து உங்களையே தற்காத்துக் கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications