பிணங்கள் கேட்கின்றன.. எந்த விளக்கை அணைப்பது.. எதை ஏற்றுவது.. வைரலாகும் ரவிக்குமாரின் சுளீர் வரிகள்!
எம்பி ரவிக்குமார் எழுதிய "விளக்கு" கவிதை வைரலாகிறது
சென்னை: "பிணங்கள் கேட்கின்றன.. எந்த விளக்கை அணைப்பது.. எந்த விளக்கை ஏற்றுவது" என்று எம்பி ரவிக்குமாரின் கவிதை ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக அரசியலில் ஒரு காலத்தில் படைப்பாளிகளே கோலோச்சி கொண்டிருந்த நிலையில், தற்போது படைப்பாளிகளை விரல் விட்டு எண்ணக்கூடிய நிலை உருவாகி இருக்கிறது... அந்த வகையில் இந்த குறையை நீக்க வந்தவர்களில் விழுப்புரம் எம்பி ரவிக்குமாரும் ஒருவர்!

வழக்கறிஞர், எழுத்தாளர், இலக்கியவாதி, அரசியல் விமர்சகர்.. விசிகவின் மாநில பொது செயலர், முன்னாள் எம்எல்ஏ, என இப்படி பன்முகத்தன்மையுடன் திகழ்பவர் ரவிக்குமார்.. தமிழ் அறிவுசார் மற்றும் ஒரு சாதி-எதிர்ப்பு ஆர்வலர்... பத்திரிகை ஆசிரியர்.. பல நூல்களை எழுதியவர்.
ஆங்கில மொழிபெயர்ப்புகள் இவரது ஸ்பெஷல்.. நிறப்பிரிகை என்ற குறும் பத்திரிக்கையின் ஆசிரியர்.. 1990களில் நம் மாநிலத்தில் பல புதிய இளம் எழுத்தாளர்கள் உருவாக காரணமாக இருந்தது இந்த நிறப்பிரிகை பத்திரிகை என்பதை யாராலும் மறுக்க முடியாது!
கொள்கை அளவில் தங்களுடன் முரண்பட்டு நிற்கும் பாமகவை எதிர்த்து களம் கண்டு வெற்றி பெற்றவர் ரவிக்குமார்... கொரோனா தடுப்பு குறித்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தன்னுடைய தொகுதியில் மேற்கொண்டு வருகிறார்.. என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை உடனுக்குடன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர் ஒரு கவிதை எழுதி உள்ளார்.. அது "விளக்கு அணைப்பது" குறித்த கவிதை... பிரதமர் ஏற்ற சொன்ன அதே விளக்குதான்.. விளக்கு ஏற்றுவது குறித்து ஏராளமானோர் தங்கள் கருத்துக்களை அறிக்கைகளாகவும், ட்வீட்களாகவும், பேட்டிகளாகவும், பதிவிட்ட நிலையில், ரவிக்குமார் மட்டும் வித்தியாசமாக தன்னுடைய கருத்தை ஒருசில வரிகளே என்றாலும் நறுக்கென பதிவிட்டுள்ளார்.. வேதனை கலந்த வலி நிறைந்த வார்த்தை வரிகள் இவைதான்:
எந்த விளக்கை அணைப்பது எந்த விளக்கை ஏற்றுவது? pic.twitter.com/dlVu47SBNx
— Dr Ravikumar M P (@WriterRavikumar) April 5, 2020
நிலம் பிளக்க
காலம் கிழித்த கோடெனக் கிடக்கும்
நெடுஞ்சாலையில்
நரகத்திலிருந்து மரணத்தை நோக்கி நடந்துகொண்டிருக்கும்
பிணங்கள் கேட்கின்றன
எந்த விளக்கை அணைப்பது
எந்த விளக்கை ஏற்றுவது
நாடோடிப் பிழைக்கும்
பழங்குடிகளின்
சாலையோரக் கூடாரத்திலிருந்து
குரலொன்று கேட்கிறது
எந்த விளக்கை அணைப்பது
எந்த விளக்கை ஏற்றுவது
உம் முன்னோர்
பேசப்பழகாத நாளிலேயே
எழுத்துக் கலை வளர்த்த
எம் ஊரின் மூதாட்டி சொல்கிறாள்:
"ஒரு விளக்கின் திரியெடுத்து
ஒரு விளக்கை ஏற்றுவோம்,
ஒரு அடுப்பின் நெருப்பெடுத்து
ஒரு அடுப்பைப் பற்றவைப்போம்
ஒருபோதும்
ஒரு விளக்கை ஏற்றுதற்கு
ஒரு விளக்கை நூர்த்ததில்லை"
-
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி












Click it and Unblock the Notifications