கொரோனா.. ஸ்டேஜ் 1ல் இருக்கிறோம்.. ஸ்டேஜ் 2வை நோக்கி செல்கிறோம்.. முதல்வர் பழனிசாமி விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் முதல்நிலையிலிருந்து இரண்டாவது நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது, தமிழகடத்த்தில் மூன்றாம் நிலை ஏற்படவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் முதல்நிலையிலிருந்து இரண்டாவது நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது, தமிழகடத்த்தில் மூன்றாம் நிலை ஏற்படவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் இந்த வைரஸ் காரணமாக மதுரையில் பலியானார். அதேபோல் இரண்டு பேர் கொரோனா வைரஸில் இருந்து பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
இன்று ஒரே நாளில் தமிழகத்தில் ஆறு பேருக்கு கொரோனா ஏற்பட்டது. கொரோனா பாதிப்பு குறித்து தீவிரமாக கண்காணித்து வரும் முதல்வர் பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

முதல்வர் பேட்டி
முதல்வர் பழனிசாமி தனது பேட்டியில், மக்களை காப்பதற்காகத்தான் நாங்கள் இங்கே பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். தமிழகத்தில் 144 தடை உத்தரவு இருக்கிறது. இதனால் எல்லோரும் வீட்டில் இருக்க வேண்டும். அப்போதுதான் கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்த முடியும். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் வெளியே செல்ல கூடாது. 21 நாட்கள் மக்கள் இதை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்.

மன அழுத்தம் கட்டுப்பாட்டு அறை
தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் மன அழுத்தங்களை போக்கவே கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டால் அவர்களது மன அழுத்தங்களை மருத்துவர்கள் தீர்த்து வைப்பார்கள். அதேபோல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு கொரோனா தொடர்பான சந்தேகங்கள், புகார்களை அளிக்கலாம்.

தமிழகம் முழுக்க படுக்கை வசதி
தமிழகத்தில் ஓமந்தூரார் மருத்துவமனை, கோவை சி.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் தலா 350 படுக்கை வசதி கொண்ட சிறப்பு கொரோனா வார்டு திறக்கப்பட்டு இருக்கிறது. இது இன்றில் இருந்து பயன்படுத்தப்படும். தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் எல்லோரும் இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்கள்.

தனிமைதான் ஒரே வழி
கொரோனா அறிகுறி உள்ள எல்லோரும் தனிமையில் இருக்க வேண்டும். தனியாக இருப்பது மட்டுமே கொரோனாவை தடுப்பதற்கு ஒரே வழி.கொரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவின் போது இன்றியமையாத பணிகளை ஒருங்கிணைக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக சிகிச்சை அளிப்பதற்காக தமிழகம் முழுவதும் 15 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது.

ஸ்டேஜ் 2
கொரோனா குறித்து மக்கள் யாரும் பீதியுடன் இருக்க வேண்டாம். தமிழகத்தில் கொரோனா முதலாம் கட்டத்தில் தான் உள்ளது. இங்கே மூன்றாம் கட்டம் வந்துவிட்டது என்று சிலர் வதந்திகளை பரப்பி வருகிறார். கொரோனா தமிழகத்தில் இரண்டாம் கட்டத்தை நோக்கி கொரோனா நகர்ந்து வருகிறது. அதனால் மக்கள் வீட்டில் இருந்தால் இதை கட்டுப்படுத்த முடியும். மக்கள் இதை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும், என்று முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications