பெரிய டீம் உள்ளது.. சென்னையில் காண்டாக்ட் டிரேசிங் எப்படி நடக்கிறது.. ராதாகிருஷ்ணன் சொன்ன சீக்ரெட்!

சென்னையில் கொரோனா வைரஸ் தடுப்பிற்காக காண்டாக்ட் டிரேசிங் எப்படி செய்யப்படுகிறது என்று கொரோனா தடுப்பு சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தடுப்பிற்காக காண்டாக்ட் டிரேசிங் எப்படி செய்யப்படுகிறது என்று கொரோனா தடுப்பு சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

    New Rules On Quarantine And Testing In Tamilnadu

    சென்னையில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மாநகராட்சி சார்பாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை இவர்தான் கவனித்து வருகிறார். சென்னை மாநகராட்சி கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.

    பேட்டி அளித்தார்

    பேட்டி அளித்தார்

    ராதாகிருஷ்ணன் தனது பேட்டியில், கொரோனா தடுப்பிற்காக சென்னையில் பலர் களமிறக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 24 மணி நேரமும் பணி செய்து கொண்டு இருக்கிறோம். வரும் நாட்களில் முன்னேற்றம் ஏற்படும். ராயபுரம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், குடிசை பகுதிகள் ஆகிய நான்கு பகுதிகள் மீது கவனம் செலுத்தி வருகிறோம். இந்த பகுதிகளுக்காக தனி திட்டங்களை வகுத்து இருக்கிறோம். செயல்படுத்தி வருகிறோம்.

    காண்டாக்ட் டிரேசிங் வழி

    காண்டாக்ட் டிரேசிங் வழி

    காண்டாக்ட் டிரேசிங் செய்ய முக்கிய வழிகளை கடைப்பிடித்து வருகிறோம். புதிதாக ஏதாவது ஏரியாவில் கேஸ்கள் வந்தால் உடனடியாக அங்கு விசாரணையை தீவிரமாக செய்கிறோம். இதற்காக பெரிய குழுவை வைத்துள்ளோம். ஒரு ஏரியாவில் கொரோனா கேஸ் வந்தால் எங்களுக்கு எப்படி வந்தது ? ஏன் வந்தது ? என்று தெரியும். களப்பணியாளர்கள் களத்தில் இருப்பதால் இதை எளிதாக செய்து வருகிறோம். இதனால் எளிதாக நாங்கள் காண்டாக்ட் டிரேசிங் செய்கிறோம்.

    போலியோ எப்படி

    போலியோ எப்படி

    போலியோவை இந்தியாவில் முதலில் கட்டுப்படுத்தியது தமிழகம்தான். அதேபோல்தான் நாம் கொரோனாவை கட்டுப்படுத்துவோம். மக்கள் ஒத்துழைப்பு தந்தால் இதை எளிதாக செய்ய முடியும். மாஸ்க்கை முகத்தில் அணிய வேண்டும். மூக்கை மூட வேண்டும். கழுத்தில் அணிய கூடாது. மாஸ்கை வாடகைக்கு வாங்க கூடாது. இதற்காக நாங்கள் மாஸ்க்கை அரசு சார்பாக இலவசமாக வழங்கி வருகிறோம்.

    மாஸ்க் வழங்குகிறோம்

    மாஸ்க் வழங்குகிறோம்

    காசு இல்லாத மக்களுக்கு மாஸ்க் வழங்கி வருகிறோம். மாஸ்க் எப்படி அணிய வேண்டும் என்று எல்லோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதற்கு நீங்கள் உறுதுணையாக எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். மக்கள் கூடும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். இதை செய்தால் தமிழகத்தில் நோய் பரவலை எளிதாக தடுக்க முடியும். இது வைரஸ், நோய் கிடையாது. அதனால் இதை கட்டுப்படுத்த முடியும், என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+