ஒரே நாளில் 12 பேருக்கு.. மொத்தமாக 63 பேருக்கு.. சென்னையின் எபிசென்டராக மாறிய ராயபுரம்.. என்ன நிலை?

சென்னையில் ஒரே நாளில் ராயபுரம் பகுதியில் மட்டும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஒரே நாளில் ராயபுரம் பகுதியில் மட்டும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. சென்னை ராயபுரத்தில் மொத்தம் 63 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    அமெரிக்காவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இருக்கும் அந்த ஒற்றுமை

    தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனா 199 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிக நபர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

    இன்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 106 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 1075 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழகம் நிலை

    தமிழகம் நிலை

    கொரோனா வைரஸ் காரணமாக இன்னும் மொத்தம் 34 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர. அதேபோல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ராயபுரம்தான் கொரோனா காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஒரே நாளில் ராயபுரம் பகுதியில் மட்டும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. சென்னை ராயபுரத்தில் மொத்தம் 63 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை ராயபுரம்

    சென்னை ராயபுரம்

    சென்னை ராயபுரத்தில் மட்டும் மற்ற மாவட்டங்களை விட அதிகமாக கொரோனா ஏற்பட்டுள்ளது. உதாரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 34 மாவட்டங்களில் 31 மாவட்டங்களில் இருக்கும் கொரோனா நோயாளிகளை விட ராயபுரம் பகுதியில் அதிகமாக கொரோனா நோயாளிகள் உள்ளனர். மோசமாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை விட ராயபுரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மண்டலங்கள்

    சென்னை மண்டலங்கள்

    சென்னையில் மொத்தம் 15 மண்டலங்களில் 13 மண்டலங்கள் கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. திருவொற்றியூர், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் 4 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அடையாறு 6 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாதவரத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ராயபுரத்தில் 63 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சோழிங்கநல்லூர், ஆலந்தூரில் தலா 2 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    வேறு மண்டலங்கள் எப்படி

    வேறு மண்டலங்கள் எப்படி

    தேனாம்பேட்டையில் 12 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தண்டையார்ப்பேட்டையில் 17 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். திருவிக நகரில் 26 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெருங்குடியில் 6 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோடம்பாக்கத்தில் 22 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அண்ணாநகரில் 22 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதான் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள் ஆகும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+