சமூக விலகலை கடைபிடிக்காவிட்டால் ரூ100 அபராதம்-14 நாட்கள் தனிமைப்படுத்துதல்- சென்னை மாநகராட்சி அதிரடி
சென்னை: கொரோனா பரவுவதைத் தடுக்க தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ100 அபராதம் விதிக்கப்படும் என்றும் 14 நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் திடீரென கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையில் மொத்தம் 906 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

இதனையடுத்து சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறது.
அதில், சென்னை மாநகரத்தில் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ100 அபராதம் விதிக்கப்படும்; மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள், ரயில்கள், வேன்கள் என அனைத்து இடங்களிலும் தனிநபர் இடைவெளியை கடைபிடித்தாக வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Recommended Video
மேலும் இறைச்சி, மீன்கடைகள், காய்கறி சந்தைகளிலும் தனிநபர் இடைவெளி கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும்; பொதுமக்கள் கூடும் இடங்களில் 2 மணிநேரத்துக்கு ஒருமுறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications