கொரோனா லாக்டவுன்: தமிழகத்தில் களை இழந்த தமிழ்ப் புத்தாண்டு- வெறிச்சோடிய கோவில்கள்
சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த லாக்டவுன் அமலில் இருப்பதால் தமிழகத்தில் இன்று சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை இழந்தன.
தமிழகத்தில் சித்திரை 1-ந் தேதியும் தமிழ்ப் புத்தாண்டாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி ,மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் தங்களது ட்விட்ட ர் பக்கங்களில் தமிழில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

பொதுவாக தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் அதிகாலையிலேயே பொதுமக்கள் கோவில்களுக்கு சென்று வழிபடுவர். ஆனால் இம்முறை கொரோனா லாக்டவுன் அமலில் இருப்பதால் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகே உள்ள பூட்டப்பட்ட கோவில்களின் முன்பாக சூடம், விளக்கு ஏற்றி வழிபட்டனர். புத்தாண்டை முன்னிட்டு கடைவீதிகள் களைகட்டியிருக்கும்.
இம்முறை லாக்டவுன் நடைமுறையில் இருப்பதாக அனைத்து இடங்களும் களை இழந்து மிகவும் வெறிச்சோடியே காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications