Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அதிகாலை 5 மணிக்கு நிறைவு- மீண்டும் போக்குவரத்து தொடங்கியது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதால் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட இரவு நேர ஊரடங்கு அதிகாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி உள்ளது. நாட்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு

தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை இரவு முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருந்தது.

போலீசார் தீவிர சோதனை

போலீசார் தீவிர சோதனை

தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கை செயல்படுத்தும் வகையில் சாலைகள், மேம்பாலங்களில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. சென்னையில் மட்டுமே சுமார் 10,000 போலீசார் இரவு நேர ஊரடங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அனைத்து மாவட்டங்களிலும் இரவு ஊரடங்கின் போது பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலைகளில் இரவு 10 மணிக்கு மேல் தேவை இல்லாமல் ஊர் சுற்றியவர்களுக்கு போலீசார் அபராதமும் விதித்தனர். பேருந்து நிலையங்களில் இருந்த கடைகளையும் மூடுவதற்கு போலீசார் உத்தரவிட்டனர். இரவுப் பணிக்கு சென்றவர்கள் உரிய அடையாள அட்டையுன் அனுமதிக்கப்பட்டனர். ரயில் நிலையம், விமான நிலையம் செல்லும் அல்லது அங்கிருந்து வீடு திரும்பும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

மீண்டும் போக்குவரத்து

மீண்டும் போக்குவரத்து

இரவு நேர ஊரடங்கு அதிகாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேநீர் கடைகள் உள்ளிட்டவைகள் 5 மணிக்குப் பிறகு திறக்கப்பட்டன. அதேபோல் நீண்டதூரம் செல்லக் கூடிய வெளியூர் பேருந்து போக்குவரத்தும் அதிகாலை 5 மணிக்குப் பிறகு தொடங்கியது. தமிழகத்தில் 2-வது நாளாக இன்று இரவும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று முழுமையான லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டால்லின் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் அபராதம்

விழுப்புரத்தில் அபராதம்

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் ஷாப்பிங் மால், நகைக்கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவைகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் மற்றும் விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீ நாதா ஆகியோர்கள் நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமுலுக்கு வந்த அதை கடை உரிமையாளரிடம் சுட்டிக்காட்டினர் தொடர்ந்து இரவு நேரத்தில் ஊரடங்கும் மீறி செயல்படும் கடை மீது நடவடிக்கை எடுத்து சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர். இதனை மீறி இரவு 10 மணிக்கு மேல் செயல்பட்ட விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள உணவகம், சென்னை சாலையில் உள்ள உணவகம், நான்குமுனை சந்திப்பில் உள்ள உணவகம் ஆகிய மூன்று உணவகத்திற்கு ரூ. 4500 அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் மோகன் எச்சரிக்கை விடுத்தார். பழனி நகரம் முழுவதும் ஆள் நடமாட்டம் இன்றி முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அங்கங்கே மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து இருந்ததால் அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் எச்சரித்து அனுப்பினர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+