தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அதிகாலை 5 மணிக்கு நிறைவு- மீண்டும் போக்குவரத்து தொடங்கியது!
சென்னை: கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதால் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட இரவு நேர ஊரடங்கு அதிகாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி உள்ளது. நாட்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு
தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை இரவு முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருந்தது.

போலீசார் தீவிர சோதனை
தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கை செயல்படுத்தும் வகையில் சாலைகள், மேம்பாலங்களில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. சென்னையில் மட்டுமே சுமார் 10,000 போலீசார் இரவு நேர ஊரடங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அனைத்து மாவட்டங்களிலும் இரவு ஊரடங்கின் போது பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலைகளில் இரவு 10 மணிக்கு மேல் தேவை இல்லாமல் ஊர் சுற்றியவர்களுக்கு போலீசார் அபராதமும் விதித்தனர். பேருந்து நிலையங்களில் இருந்த கடைகளையும் மூடுவதற்கு போலீசார் உத்தரவிட்டனர். இரவுப் பணிக்கு சென்றவர்கள் உரிய அடையாள அட்டையுன் அனுமதிக்கப்பட்டனர். ரயில் நிலையம், விமான நிலையம் செல்லும் அல்லது அங்கிருந்து வீடு திரும்பும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

மீண்டும் போக்குவரத்து
இரவு நேர ஊரடங்கு அதிகாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேநீர் கடைகள் உள்ளிட்டவைகள் 5 மணிக்குப் பிறகு திறக்கப்பட்டன. அதேபோல் நீண்டதூரம் செல்லக் கூடிய வெளியூர் பேருந்து போக்குவரத்தும் அதிகாலை 5 மணிக்குப் பிறகு தொடங்கியது. தமிழகத்தில் 2-வது நாளாக இன்று இரவும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று முழுமையான லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டால்லின் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் அபராதம்
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் ஷாப்பிங் மால், நகைக்கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவைகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் மற்றும் விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீ நாதா ஆகியோர்கள் நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமுலுக்கு வந்த அதை கடை உரிமையாளரிடம் சுட்டிக்காட்டினர் தொடர்ந்து இரவு நேரத்தில் ஊரடங்கும் மீறி செயல்படும் கடை மீது நடவடிக்கை எடுத்து சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர். இதனை மீறி இரவு 10 மணிக்கு மேல் செயல்பட்ட விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள உணவகம், சென்னை சாலையில் உள்ள உணவகம், நான்குமுனை சந்திப்பில் உள்ள உணவகம் ஆகிய மூன்று உணவகத்திற்கு ரூ. 4500 அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் மோகன் எச்சரிக்கை விடுத்தார். பழனி நகரம் முழுவதும் ஆள் நடமாட்டம் இன்றி முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அங்கங்கே மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து இருந்ததால் அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் எச்சரித்து அனுப்பினர்
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications