வேகம் எடுக்கிறது.. தமிழகத்தில் 105 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 1477 ஆக உயர்வு.. அதிர்ச்சி!
இன்று தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை: இன்று தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தது. முக்கியமாக தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்படும் நபர்களை விட தினமும் டிஸ்சார்ஜ் ஆகும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
ஆனால் நான்கு நாட்களுக்கு பிறகு மீண்டும் தமிழகத்தில் கொரோனா வேகம் எடுத்துள்ளது. ராபிட் கிட் சோதனை கருவிகள் மூலம் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா வந்துள்ளது.

மொத்தம் எத்தனை
இன்று தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரிப்பு. சென்னையில் மட்டும் 50 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது.

வேறு எங்கே
தஞ்சாவூரில் கொரோனா வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. தஞ்சாவூரில் 10 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தமாக 46 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கோவையில் 5 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் 133 பேருக்கு கோவையில் கொரோனா ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் 5 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மொத்தம் அங்கு 74 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி நிலை
திருநெல்வேலியில் 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 62 பேருக்கு கொரோனா உள்ளது. செங்கல்பட்டில் 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 53 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மதுரையில் 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 46 பேருக்கு கொரோனா உள்ளது. விழுப்புரத்தில் 7 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 33 பேருக்கு கொரோனா உள்ளது.

நாகப்பட்டினத்தில் நிலை
நாகப்பட்டினத்தில் 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. மொத்தம் அங்கு 43 பேருக்கு கொரோனா உள்ளது. கடலூரில் 6 பேருக்கு கொரோனா இன்று ஏற்பட்டது. மொத்தம் 26 பேருக்கு அங்கு கொரோனா உள்ளது. திருவாரூரில் 5 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மொத்தம் அங்கு 26 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.தென்காசியில் 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மொத்தம் 22 பேருக்கு அங்கு கொரோனா உள்ளது.

பலி இல்லை
விருதுநகரில் 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 19 பேருக்கு கொரோனா உள்ளது. காஞ்சிபுரத்தில் ஒருவருக்கு இன்று கொரோனா ஏற்பட்டது. அங்கு மொத்தம் 9 பேருக்கு கொரோனா உள்ளது. இன்று மட்டும் 46 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக தமிழகத்தில் 411 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் யாரும் கொரோனா காரணமாக பலியாகவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications