Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேம்சேஞ்சராகும் "மோல்னுபிரவீர்".. கொரோனாவை குணப்படுத்தும் உலகின் முதல் மாத்திரை? - செம பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா வைரசுக்கு எதிராக உலகின் முதல் மாத்திரையாக மோல்னுபிரவீர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் சிகிச்சையில் மோல்னுபிரவீர் மிகப்பெரிய கேம் சேஞ்சராக இருக்கும் என்று மருத்துவ வல்லுனர்கள் பலர் தெரிவித்து உள்ளனர்.

உலகம் முழுக்க கொரோனாவிற்கு எதிராக கோவிஷீல்ட், கோவாக்சின், ஃபைசர், மாடர்னா என்று பல வேக்சின்கள் இருக்கின்றன. இவை எல்லாம் கொரோனாவை தடுக்கும் தடுப்பூசிகள்தான். ஆனால் கொரோனா வந்தவர்களை குணப்படுத்தும் மருந்துகள் இன்னும் மார்கெட்டிற்கு வரவில்லை.

அதாவது கொரோனா வந்த பின்.. இந்த மாத்திரை சாப்பிட்டால் போதும் குணமாகிவிடலாம் என்று கூறும் அளவிற்கு இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. நோயாளிகளுக்கு இருக்கும் அறிகுறிகளை வைத்து அதற்கு மட்டும் மருந்து கொடுத்து மருத்துவம் பார்க்கிறார்கள்.

மருத்துவம்

மருத்துவம்

உதாரணமாக கொரோனா நோயாளிக்கு இருமல் இருந்தால் இருமல் மருந்து, காய்ச்சல் இருந்தால் காய்ச்சல் மருந்து, மூச்சு பிரச்சனை இருந்தால் அது தொடர்பான சிகிச்சைகள் வழங்கப்படும். மாறாக இதுதான் கொரோனாவிற்கு தீர்வு என்று இதுவரை உறுதியாக மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஐவர்மெக்டின், ரெம்டிஸ்வர் போன்ற மருந்துகள் சில காலம் பயன்படுத்தப்பட்டு, பின்னர் மருத்துவ ரீதியாக அதன் பலன்கள் உறுதி செய்யப்படாததால் அந்த மருந்துகள் கைவிடப்பட்டது.

நிறுவனம்

நிறுவனம்

இந்த நிலையில் ஐவர்மெக்டிக் மருந்தை உருவாக்கிய அதே நிறுவனமான மெர்க் நிறுவனம் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மோல்னுபிரவீர் மருந்தை உருவாக்கி உள்ளது. அதாவது இது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மாத்திரை ஆகும். அறிகுறியோடு உள்ள கொரோனா நோயாளிகள், கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா கண்டறியப்பட்டவர்களுக்கு மோல்னுபிரவீரை பரிந்துரை செய்யலாம் என்று இந்த நிறுவனம் கூறியுள்ளது.

Recommended Video

    Vaccine ஆய்வு முடிவுகள் நம்பிக்கை அளிக்கிறது | Dr. E Theranirajan explain | Oneindia Tamil
    அமெரிக்கா

    அமெரிக்கா

    அமெரிக்காவை சேர்ந்த Ridgeback Biotherapeutics என்ற நிறுவனத்தோடு இணைந்து மோல்னுபிரவீர் மருந்தை இந்த மெர்க் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதுவரை செய்யப்பட்ட மூன்று கட்ட சோதனையில் மோல்னுபிரவீர் மருந்து கொரோனா நோயாளிகளின் உடல் மோசம் ஆவதையும், மரணம் அடைவதையும் தடுத்து உடனே குணமடைய வழி செய்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 775 கொரோனா நோயாளிகளிடம் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது.

    சோதனை

    சோதனை

    அதில் சிலருக்கு மோல்னுபிரவீர் மருந்தும், சிலருக்கு சத்து மாத்திரையும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மோல்னுபிரவீர் எடுத்தவர்கள் 7.3 பேர் மட்டுமே மருத்துவமனையில் சேரும் அளவிற்கு உடல் நலிந்துள்ளது. அதே சமயம் சத்து மாத்திரை எடுத்தவர்களில் 14.1 சதவிகிதம் பேரின் உடல்நிலை மோசமாகி உள்ளது. அதோடு மோல்னுபிரவீர் எடுத்த யாரும் பலியாகவில்லை, மாறாக சத்து மாத்திரை எடுத்த 8 பேர் பலியாகி உள்ளனர்.

    எப்படி வேலை செய்யும்?

    எப்படி வேலை செய்யும்?

    பொதுவாக கொரோனா வைரஸ் உடலில் புகுந்ததும் தனது ஆர்என்ஏ மூலம் இரண்டு, மூன்று என்று பல பிரதிகளை எடுத்துக்கொள்ளும். இப்படி கொரோனா வைரஸ் பிரதி எடுத்துக்கொள்வதன் மூலம் உடலில் பல்கி பெருகி பாதிப்பை ஏற்படுத்தும். மோல்னுபிரவீர் கொரோனா வைரஸின் இந்த ஆர்என்ஏ பிரதி எடுத்தலை தடுக்கும். அதாவது கொரோனா வைரஸின் ஆர்என்ஏவை மோல்னுபிரவீர் தன்னை போல பிரதி எடுக்க வைத்து ஏமாற்றும். இதனால் கொரோனா வைரஸின் ஆர்என்ஏ உடலில் குறைந்து கொரோனாவின் ஆதிக்கத்தை குறைக்கும் .

    ஆர்என்ஏ

    ஆர்என்ஏ

    கொரோனா உடலில் பெருகினால்தானே பாதிப்பு அதிகரிக்கும். இதனால் நேரடியாக கொரோனாவின் ஆர்என்ஏ பிரதி எடுத்தலையே தடுத்து மோல்னுபிரவீர் உடலை குணப்படுத்துகிறது. இந்த மோல்னுபிரவீர் டெல்டா, மு, காமா வகை கொரோனாவிற்கு எதிராகவும் இது சிறப்பாக செயலாற்றுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மோல்னுபிரவீர் கொரோனா சிகிச்சையில் பெரிய கேம் சேஞ்சராக இருக்க போகிறது.

    யு.கே

    யு.கே

    அமெரிக்காவில் ஏற்கனவே இந்த மோல்னுபிரவீர் மருந்துக்கு அந்நாட்டு மருந்து கட்டுப்பட்டு இயக்குனரகம் ஆர்டர் கொடுத்துள்ளது. அதேபோல் யு.கேவில் மோல்னுபிரவீர் மருந்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டுவிட்டது. யு.கேவில் லாக்வ்ரியோ என்ற பெயரில் இந்த மருந்து விற்கப்பட உள்ளது. மற்ற நாடுகளிலும் விரைவில் இந்த மருந்து அமலுக்கு வரும் வாய்ப்புகள் உள்ளன.

    எப்படி உதவுகிறது

    எப்படி உதவுகிறது

    கொரோனா நோயாளிகள் மோசமாக பாதிக்கப்படுவதை தவிர்த்து ஆரம்பத்திலேயே பரவலை இது குணப்படுகிறது. இதனால் பல புதிய வேரியண்ட்கள் உருவாவது குறையும், அதேபோல் பலி எண்ணிக்கை குறையும். மாத்திரை வடிவில் கிடைப்பதால் எளிதாக மருத்துவரின் அனுமதியோடு காய்ச்சலுக்கு மருந்து எடுப்பது போல வரும் காலத்தில் மோல்னுபிரவீரை பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+