சென்னையில் எங்கே தவறு நடந்தது? ஏன் கொரோனா அதிகரிக்கிறது.. இன்று முதல்வர் பழனிசாமி முக்கிய மீட்டிங்
சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று முக்கியமான ஆலோசனை கூட்டத்தை நடத்த இருக்கிறார் .
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று முக்கியமான ஆலோசனை கூட்டத்தை நடத்த இருக்கிறார் .
தமிழகத்தில் நேற்று 527 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் தமிழகத்தில் இத்தனை பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 3550 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று மட்டும் 266 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1724 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஆலோசனை
நேற்று அதிக அளவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்கு கோயம்பேடு சந்தை காரணம் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று முக்கியமான ஆலோசனை கூட்டத்தை நடத்த இருக்கிறார். சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சிறப்பு அதிகாரிகள் உடன் ஆலோசனை செய்ய இருக்கிறார்.
முக்கிய அதிகாரிகள் வருகிறார்கள்
சென்னை அம்மா மாளிகையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சி அதிகாரிகளான மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் உடன் முதல்வர் ஆலோசனை செய்ய இருக்கிறார். அதேபோல் சென்னையை சேர்ந்த முக்கிய சில மருத்துவர்களும் இதில் கலந்து கொள்கிறார்கள்.
யார் எல்லாம் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்
தலைமை செயலாளர் சண்முகம், சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ், சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இவர்கள் ஆலோசனை செய்கிறார்கள். இதனால் இந்த கூட்டம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. சென்னையில் எங்கே தவறு நடந்தது, எப்படி திடீர் என்று கேஸ்கள் அதிகரித்தது.
ஆக்சன் பிளான்
இதை இனி எப்படி தடுப்பது என்று திட்டமிட இருக்கிறார்கள். சென்னையில் டெஸ்டிங் முறையை தீவிரப்படுத்துவது எப்படி. காண்டாக்ட் டிரேசிங் முறைகளை தீவிரமாக்குவது எப்படி என்று ஆலோசனை செய்ய இருக்கிறார்கள்.இந்த ஆலோசனையின் மூடில் முக்கியமான ஆக்சன் பிளான் ஏதாவது தயார் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல் சென்னைக்கு என்று சிறப்பு அறிவிப்புகள் வெளியாகும் என்கிறார்கள்.