தமிழக பொருளாதாரத்தை மீட்க அதிரடி திட்டம்.. முன்னாள் ஆர்பிஐ இயக்குனர் சி.ரங்கராஜன் தலைமையில் குழு!
சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கும் மோசமான பொருளாதார சரிவை சமாளிக்கும் வகையில் புதிய உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிற்கு ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தலைமை ஏற்றுள்ளார்.
நாடு முழுக்க மே 3ம் தேதி வரை கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த, நோயை கட்டுப்படுத்தவும் நாடு முழுக்க 40 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் இதனால் கடுமையாக நிதி நெருக்கடிக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் இதனால் கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு மாநிலங்களில் புதிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் அங்கு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கும் மோசமான பொருளாதார சரிவை சமாளிக்கும் வகையில் புதிய உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் இந்த குழுவிற்கு ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தலைமை ஏற்றுள்ளார்.
இந்த குழு மூன்று மாதத்திற்குள் அரசிடம் அறிக்கை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழுவில் மொத்தம் 24 பேர் இடம்பெற்றுள்ளனர். பல்வேறு பிரிவுகளை சேர்ந்த வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர். முக்கியமாக தொழிற்துறை வல்லுநர்கள் பலர் இதில் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல் இந்த அமைப்பில் யுனிசெப் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சரிவை சரி செய்யும் வகையிலும் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையிலும், முதலீடுகளை அதிகரிக்கும் வகையிலும் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications