கொரோனா இல்லாத மாநிலம்.. வைரஸை 3 நாளில் விரட்டி அடித்த தமிழகம்.. விஜயபாஸ்கர் & டீம் சாதித்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கொரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நேற்று இரவு மொத்தமாக குணப்படுத்தப்பட்டார்.

Recommended Video

    This is how did TN Govt succeed against the coronavirus | கொரோனவை தமிழகம் எதிர்கொண்டது இப்படித்தான்!

    கடந்த சனிக்கிழமை தமிழகத்திலும் முதல் நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பரவியது. இவருக்கு ஓமன் நாட்டிற்கு சென்று திரும்பிய பின் கொரோனா ஏற்பட்டுள்ளது.

    வைரஸ் பாதிக்கப்பட்ட இந்த நபர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் ஓமன் நாட்டில் பணியாற்றி வருகிறார். அங்கு இவர் கட்டிட தொழிலாளியாக இருக்கிறார்.

    தமிழகம்

    தமிழகம்

    12 வருடமாக அங்கு பணியாற்றும் இவர், அவ்வப்போது தமிழகம் வந்து சென்றுள்ளார். இந்த நிலையில் அங்கு கொரோனா பாதிப்பு வந்ததை அடுத்து சரியாக 10 நாட்களுக்கு முன் இந்தியா வந்துள்ளார். காஞ்சிபுரம் வந்த இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. வறட்டு இருமல், சளி தொல்லை இருந்துள்ளது இதையடுத்து இவர் சிகிச்சைக்காகக் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதில் கொரோனா இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

    தீவிரம்

    தீவிரம்

    அவரின் ரத்த மாதிரி புனே அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்பின்தான் தமிழக சுகாதாரத்துறை தீவிரமாக செயல்பட தொடங்கியது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலான குழு தீவிரமாக களமிறங்கி தனது பணிகளை கவனிக்க தொடங்கியது. இவரை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

    எல்லோரையும் தேடினார்கள்

    எல்லோரையும் தேடினார்கள்

    இவர் தொடர்பு கொண்ட நபர்களை எல்லாம் சோதனை செய்தனர். இதனால் மருத்துவ குழு ஒன்று கொரோனா பாதித்தவரின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த குழு, அந்த ஊரில் உள்ள எல்லோரையும் சோதனை செய்ய ரத்த மாதிரிகளை எடுத்தது. அந்த நபர் தொடர்பு கொண்ட எல்லோரையும் சோதனை செய்தது. இதனால் 10 மருத்துவர்கள் கொண்ட குழு அங்கே சென்றது குறிப்பிடத்தக்கது.

    எப்படி பரவும்

    எப்படி பரவும்

    கொரோனா வைரஸ் தொடுதல் மூலம் பரவ கூடிய வைரஸ் ஆகும். ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இது எளிதாக பரவும். இதனால் காஞ்சிபுரம் இளைஞர் தொடர்பு கொண்ட நபர்களுக்கும் நோய் தாக்குதல் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க வேண்டும். இதை காண்டாக்ட் டிரேஸ் முறை என்பார்கள். இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக இதே முறையை தமிழக அரசு பயன்படுத்தியது. அந்த நபரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் சோதனை செய்யப்பட்டது.

    இன்னொரு பக்கம் சிகிச்சை

    இன்னொரு பக்கம் சிகிச்சை

    இதன் மூலம் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பரவவில்லை என்று உறுதி செய்யப்பட்டது. இன்னொரு பக்கம் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கொரோனாவிற்கு சிகிச்சை அளிப்பது அடிப்படை விஷயங்கள் ஆகும். காய்ச்சல் மருந்து, ஜலதோஷம் மருந்து மற்றும் வயிற்றுப்போக்கு மருந்துகளை மட்டும் தொடர்ந்து கொடுத்து வந்தால் போதும். வைரஸ் தானாக குணமாகும் வரை இதை செய்ய வேண்டும்.

    சிறப்பு

    சிறப்பு

    அதே சமயம் இந்த வைரஸ் பிறருக்கும் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதை தமிழக சுகாதாரத்துறை தீவிரமாக பார்த்துக் கொண்டது. அதே போல் விஜயபாஸ்கர் இதற்காக கூடுதல் பணியாளர்களையே நியமித்து இருந்தார். அவர்களுக்கு முழு உரிமையும், முடிவு எடுக்கும் அதிகாரங்களும் கொடுத்து இருந்தார். சரியான திட்டமிடல் மற்றும் செயல்பாடுகள் மூலம் தமிழகத்தில் இருந்து வெறும் 3 நாட்களில் கொரோனா வைரஸ் துரத்தப்பட்டு இருக்கிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+