தமிழகத்தில் யாருக்கெல்லாம் கொரோனா.. எந்த ஊர்? எப்போது வந்தனர்? முக்கிய விவரங்களை வெளியிட்ட அரசு!
கொரோனா வைரஸால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: கொரோனா வைரஸால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முதல் முறையாக இவர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பெரிய கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தாக்குதல் தற்போது 150 நாடுகளுக்கும் அதிகமாக பரவி உள்ளது.
இந்தியாவில் மட்டும் 440 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. தமிழகத்தில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு கொரோனா குணப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதில் 9 பேரின் விவரம் வெளியாகி உள்ளது.
தமிழகம் நிலை
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பெயர் மற்றும் பாலினம் தவிர்த்து மற்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. நபர் 1 - 45 வயது காஞ்சிபுரத்தை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 28-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார். ஓமனில் இருந்து சென்னை வந்தார். 7-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
நபர் 2 - 25 வயது உத்தர பிரதேசத்தை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 13-3-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார். டெல்லியில் இருந்து சென்னை வந்தார். 18-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
நான்காவது கேஸ்
நபர் 3- 21 வயது சென்னையை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 17-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார். அயர்லாந்தில் இருந்து சென்னை வந்தார். 20-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
நபர் 4 - 65 வயது சென்னை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 15-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார். நியூசிலாந்து டூ சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்தார். 21-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
ஐந்து மற்றும் ஆறாவது நபர்
நபர் 5 - 69 வயது ஈரோட்டை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 11-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார். தாய்லாந்தில் இருந்து ஈரோடு வந்தார். 21-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
நபர் 6- 75 வயது ஈரோட்டை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 11-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார். தாய்லாந்தில் இருந்து ஈரோடு வந்தார். 21-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
நபர் 7 - 25 வயது கோபம்ப்புத்தூர் சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 15-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார். ஸ்பெயினில் இருந்து டெல்லி சென்று அங்கு இருந்து பெங்களூர், அங்கு இருந்து கோவை வந்தார். 22-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
கடைசி இரண்டு கேஸ்கள்
நபர் 8 - 43 வயது திருநெல்வேலி சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 20-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார். துபாயில் இருந்து மதுரை வந்தார். 22-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
நபர் 9 - 64 வயது சென்னை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 20-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார். அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் வந்து அங்கு இருந்து சென்னை வந்தார். 22-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.