4 லட்சத்தை தாண்டியது.. தமிழகத்தில் 403242 பேருக்கு கொரோனா.. இன்று மட்டும் 5981 பேர் பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று 5981 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்துள்ளது.
தமிழகத்தில் நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக மீண்டும் கொரோனா கேஸ்கள் தமிழகத்தில் ஏறுமுகத்தில் உள்ளது. கொரோனா காரணமாக தமிழகத்தில் 403242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்..
கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடங்கிய நிலையில், சரியாக 5 மாதங்களில் 4 லட்சம் பேர் தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கழிவறைகள் மூலம் பரவும் கொரோனா வைரஸ்.. சீனாவில் காலியான குடியிருப்பில் கண்டுபிடிப்பு
மரணம்
தமிழகத்தில் இன்று 5870 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 343930 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 52364 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 109 பேர் பலியாகி உள்ளனர். 6948 பேர் இதுவரை தமிழகத்தில் பலியாகி உள்ளனர்.
சோதனை எத்தனை
தமிழகத்தில் செய்யப்பட்டு இருக்கும் கொரோனா சோதனை விவரம்,
இன்று 76345 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று சோதனைகள் உயர்த்தப்பட்டுள்ளது. 4498706 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 74388 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 4347511 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.
சென்னை எப்படி
தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. சென்னையில் இன்று 1286 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 130564 பேருக்கு சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 13450 பேர் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். சென்னையில் கடந்த 10 நாட்களாக தினமும் 1200க்கும் அதிகமான கேஸ்கள் வருகிறது.
மற்ற மாவட்டங்கள்
சென்னை தவிர பிற மாவட்டங்களிலும் கொரோனா கேஸ்கள் அதிகரித்துள்ளது. செங்கல்பட்டில் 298 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 24749 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று திருவள்ளூரில் 439 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 13398 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று கோவையில் 323 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 23627 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.