கொரோனா- இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக தமிழகம் 2-வது இடம்- 9,674 பேர் பாதிப்பு
சென்னை: கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் மகாரஷ்டிராவுக்கு அடுத்ததாக தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 27,524 பேரும் தமிழகத்தில் 9,674 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் தொடக்கத்தில் கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. இதனையடுத்து மகாராஷ்டிரா மற்றும் டெல்லி மாநிலங்களில் கொரோனா கோரத் தாண்டவமாடியது.
ஆனால் கேரளாவில் நிலைமை தலைகீழாக மாறியது. தற்போதைய நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,524 ஆகும். மகாராஷ்டிராவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000-த்தை தாண்டியுள்ளது. இம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 44 பேர் மரணித்தனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மொத்தம் 1,019 ஆக அதிகரித்துள்ளது.

2-வது இடத்தில் தமிழகம்
இதனையடுத்து 2-வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 447 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த ஒரு வார கால அளவில் தமிழகத்தில் இது குறைவான பாதிப்பு ஆகும். தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்குகிறது. தமிழகத்தில் மொத்தம் 9,674 பேர் கொரோனாவால் பாதிக்கப்ப்ட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவும் உயிரிழப்புகளும் தொடர்கிறது. தமிழகத்தில் கொரோனா மரணங்கள் 66 ஆக அதிகரித்துள்ளது.

3-வது இடம் குஜராத்
குஜராத் 3-வது இடத்தில் உள்ளது. இங்கு நேற்று மட்டும் 324 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு 9,592 ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 600ஐ நெருங்கியுள்ளது. மொத்தம் 586 பேர் கொரோனாவால் குஜராத்தில் மரணித்துப் போயிருக்கின்றனர்.

டெல்லியில் நிலவரம்
டெல்லி மாநிலம் தற்போது கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் இருக்கிறது. டெல்லியில் நேற்று ஒரே நாளில் 472 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் டெல்லியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 8,470 ஆக உயர்ந்தது. டெல்லியில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மொத்தம் 115 பேர் கொரோனாவால் டெல்லியி0ல் மாண்டு போயுள்ளனர்.

மே.வங்கத்தில் மரணம் அதிகம்
இந்திய அளவில் 5,6-வது இடங்களில் உள்ள ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசங்களில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது. ஆனால் இம்மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன. மத்திய பிரதேசத்தில் 237 பேரும் ராஜஸ்தானில் 125 பேரும் கொரோனாவால் மரணித்துப் போயுள்ளனர். மேற்கு வங்கத்தில் கொரோனா உயிரிழப்புகள் 215 ஆக அதிகரித்துள்ளன.












Click it and Unblock the Notifications