சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா.. உயிர் காக்கும் விலை உயர்ந்த மருந்துகள் வந்தாச்சு.. உற்சாக தகவல் சொன்ன விஜயபாஸ்கர்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உயிர் காக்கக் கூடிய ஊசி மருந்துகள், தமிழகம் வந்துள்ளதாகவும், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மேலும் கூறியதாவது: சிகிச்சைக்கு உயர்ந்த விலை கொண்ட மருந்துகளை ஊசிகளை கொள்முதல் செய்வதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

1200 குப்பிகள் Tocilizumab (400 mg) 42,500 குப்பிகள் remdesivir (100 mg) வாங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் மேலும் 3,713 பேருக்கு கொரோனா.. தொடர்ந்து 3ஆவது நாளாக உச்சத்தை தொடும் தொற்றுதமிழகத்தில் மேலும் 3,713 பேருக்கு கொரோனா.. தொடர்ந்து 3ஆவது நாளாக உச்சத்தை தொடும் தொற்று

மருந்துகள்

மருந்துகள்

இதேபோன்று 1 லட்சம் குப்பிகள் enoxaparin (40mg) வாங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதில், எல்லா மருந்துகளிலும் கிட்டத்தட்ட பாதி அளவுக்கு வந்து சேர்ந்துள்ளன மீதமுள்ள மருந்துகள் ஓரிரு நாளில் வந்தடையும். தேவைக்கேற்ப மேலும் மருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மாவட்ட மருத்துவமனைகள்

மாவட்ட மருத்துவமனைகள்

விலை உயர்ந்த இந்த மருந்துகள் ஏற்கனவே மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் துவங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் மிக கடுமையாக கொரோனா பரவி வரும் நிலையில் எப்படியாவது அதை கட்டுப்படுத்துவதற்கு சிகிச்சை பெறுபவர்களை உடனடியாக குணப்படுத்தி அனுப்ப வேண்டியது அவசியமாகின்றது.

உடனடி குணம்

உடனடி குணம்

ஏனெனில், பாதிப்பு அதிகமானால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி கிடைப்பது சிக்கலாகி விடும். எனவே தரமான மருந்துகளை வாங்கி உடனுக்குடன் சிகிச்சை அளிப்பதில் அரசு தீவிரமாக இருப்பது தெளிவாகிறது.

வைரசை குறைக்கும்

வைரசை குறைக்கும்

மேற்சொன்ன, இந்த மருந்துகள் ஐசிஎம்ஆர் பரிந்துரைத்தவையாகும். இதனால் வைரஸ் லோடு என்பது வெகுவாக குறைக்கப்படுவது நிரூபணமாகியுள்ளது. ஆனால், குணமடையும் வேகம் எத்தனை நாட்கள் என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை.

English summary
Costly medicines for coronavirus treatment is purchased by Tamilnadu Government and they are sent to all the district government hospital, says public welfare minister vijayabaskar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X