சென்னை அசோக் நகர் 11வது தெருவில் காய்கறி வாங்கிய 11 பேருக்கு கொரோனா.. தெருவுக்கு சீல்
சென்னை: திடீர் வியாபரிகளிடம் காய்கறி வாங்கிய சென்னை அசோக் நகரின் 11வது தெருவில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அசோக் நகர் 11வது தெரு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை அசோக் நகர் புதூரைச் சேர்ந்த 2 பேர் ஊரடங்கு காரணமாக வேலை இழந்த நிலையில வறுமையில் தவித்தனர். அவர்கள் பார்த்து வந்த பால்சீலிங் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருந்தனர்.
இதற்கிடையே காற்கறிகளை தள்ளுவண்டிகள் வைத்து விற்பதற்கு அனுமதி இருப்பதை பார்த்த அவர்கள் திடீரென காய்கறி வியாபாரிகளாக மாறினார்கள். சென்னை கோயம்பேட்டில் இருந்து காய்கறிகளை மொத்தமாக வாங்கி வந்து சில்லறையில் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இவர்களிடம் காய்கறி வாங்கிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வியாபாரத்தில் ஈடுபட்ட 2 பேருக்கும் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்களிடம் காய்கறி வாங்கிய நபர்களுக்கும் பரிசோதனை செய்தனர்.
இதில் அசோக் நகர் 11வது தெருவில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 11 பேரையம் சுகாதாரத்துறை அதிகாரிகள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அத்துடன் 11 பேரின் குடும்ப உறுப்பினர்களையும் தனிமைப்படுத்தி உள்ளனர். தொற்று மேலும் பரவாமல் இருக்க அவர்கள் வசித்து வந்த 11வது தெரு முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து மக்கள் யாரும் வெளியே செல்ல முடியாதபடி மூடி சீல் வைத்தனர்.
காய்கறி வாங்க வெளியே போன மகன்.. திரும்பி வரும்போது பொண்டாட்டியுடன் வந்ததால்.. ஷாக் ஆன அம்மா!
சென்னை திருவிக நகர் மண்டலத்தில் தான் சென்னையிலேயே அதிகம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புளியந்தோப்பு பகுதியில் 9 பேருக்கும், பேசின் பிரிட்ஜ் பகுதியில் 6 பருக்கும் என திருவிக நகர் மண்டலத்தில் நேற்று மட்டும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.