கொரோனாவில் இருந்து மீண்டார் கனிமொழி - மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
கொரோனா தொற்றில் இருந்து மீண்ட கனிமொழி எம்.பி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். சில நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை: கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்ட கனிமொழி எம்.பி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். சில நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து கனிமொழி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக எம்.பி கனிமொழிக்கும் கடந்த 3ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கனிமொழி விரைவில் குணமடைய வேண்டும் என்று பலரும் வாழ்த்து கூறியிருந்தனர்.

தான் குணமடைய வாழ்த்திய அனைவருக்கும் நன்றி கூறியிருந்தார் கனிமொழி. சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்கிழமை நடைபெற்ற நிலையில் கொரோனா நோயாளிகள் மாலை 6 மணிக்கு மேல் வந்து வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது. இதனையடுத்து சென்னை மயிலாப்பூர் வாக்குச்சாவடிக்கு கொரோனா பாதுகாப்பு கவச உடை அணிந்து வந்த கனிமொழி வாக்களித்து தனது ஜனநாயக கடைமையை நிறைவேற்றினார்.

வாக்களிக்க வாய்ப்பளித்த தேர்தல் ஆணையத்திற்கு அவர் நன்றி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து கனிமொழி குணமடைந்து விட்டார் என்றும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து மீண்டாலும் அடுத்த 5 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள கனிமொழிக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications