முட்டாள்களே வாயை மூடிக்கிட்டு வீட்ல இருங்க .. கொரோனா வைரஸ் மதம் பார்ப்பதில்லை.. குஷ்பு ஆவேசம்
சென்னை: கொரோனா வைரஸ் மதம் பார்ப்பதில்லை. அது கடவுளைக் கண்டு அஞ்சுவதில்லை என்பதை, இதை சமூக பிரச்சனையாக மாற்ற முயலும் முட்டாள்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கடுமையாக சாடியுள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 1750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 53 பேர் உயிரிழந்துள்ளனர். 152 பேர் குணமடைந்துள்ளனர். 1545 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நாட்டிலேயே மிக அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 325 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3வதாக தமிழகத்தில் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4வதாக டெல்லியில் 123 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு உத்தரவு
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்களிடையே சமூக இடைவெளியை உருவாக்க வேண்டியது அவசியம். எனவே மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. , 21 நாள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள். அத்தியாவசிய பணிகள் தவிர அனைத்து பணிகளும் முடங்கி உள்ளது.

பலருக்கு கொரோனா
இந்நிலையில் மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை டெல்லியில் தப்லிக் ஜமாத் சார்பில் மத வழிபாடு மற்றும் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் பல்லாயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.. இதனைத் தொடர்ந்து இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து சோதனை செய்து கொள்ள வேண்டும் என தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

நடிகை குஷ்பு காட்டம்
இதைவைத்து முஸ்லிம்களால்தான் அதிகம் கொரோனா வைரஸ் பரப்புவதாக சமூக வலைதளத்தில் பலரும் பதிவுகளை வெளியிட தொடங்கினார்கள். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கொரோனா வைரஸ் பிரச்சனையில் மத ரீதியாக கருத்துக்களை வெளியிடுதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கடும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், "இந்த சூழலில் மிகவும் அச்சப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால் சில முட்டாள்கள் கொரோனா வைரஸை ஒரு சமூகப் பிரச்சினையாக மாற்றுகிறார்கள் இந்த கொரோனா வைரஸுக்கு மதம் இல்லை, அது மதங்களைப் பார்ப்பதுமில்லை. கடவுளைக் கண்டும் அஞ்சுவதில்லை என்பதை அந்த முட்டாள்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே வாயை மூடிக் கொண்டு வீட்டில் இருக்க வேண்டும்.
|
மதம் கிடையாது
எல்லா மதக் கூட்டங்களும், இந்தக் காலகட்டத்தில் மனிதன் உருவாக்கிய பேரழிவுகள். மீண்டும் சொல்கிறேன், கொரோனா வைரஸுக்கு மதம் கிடையாது. அது ஜமாத்தோ, உ.பி. அல்லது கேரளாவோ எதுவாக இருந்தாலும் சரி, எல்லாமே தவறுதான். இது போன்ற ஆபத்தான கட்டத்தில் கூட மதத்தைத் தாண்டி சிந்திக்காதது மக்களின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது." இவ்வாறு குஷ்பு காட்டமாக தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications