இன்னும் சில நாட்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடக்கம்.... ஹர்ஷ் வர்தன் நம்பிக்கை
சென்னை: இந்தியாவில் இன்னும் சில நாட்களில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

இந்தியாவில் கடந்த வாரம் சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. மேலும், நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகையும் கடந்த வாரம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், மற்றொரு தடுப்பூசி ஒத்திகை இன்று நாடு முழுதும் உள்ள 33 மாநிலங்களில் உள்ள 736 மாவட்டங்களில் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, அப்பல்லோ மருத்துவமனை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஆகியவற்றில் நடைபெற்ற ஒத்திகையை ஹர்ஷ் வர்தன் நேரில் ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியாவில் அடுத்த சில நாட்களில் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படும். முதல்கட்டமாகச் சுகாதார ஊழியர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும்.
இடைப்பட்ட காலத்தில் தடுப்பூசி குறித்து செய்திகளை நாட்டிலுள்ள அனைத்து மக்களிடமும் எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இதுவரை மூன்று தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான சுகாதார ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்துத் தெரிந்து கொண்டுள்ளனர்" என்றார்.

இந்தியாவில் கோ-வின் என்ற மொபைல் செயலி மூலம் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சுகாதார ஊழியர்கள், முன்களபணியாளர்கள் என மொத்தம் ஒரு கோடி பேருக்கு மத்திய அரசு முதல்கட்டமாகத் தடுப்பூசி வழங்கவுள்ளது. புனேவிலுள்ள சீரம் நிறுவனத்திடம் இருந்து நாட்டிலுள்ள பல பகுதிகளுக்குத் தடுப்பூசி விநியோகிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications