சு.வெங்கடேசன் எம்.பி.யை அமைச்சர் கே.என்.நேரு ஒருமையில் பேசியது அரசியல் நாகரீகமற்றது: கே.பாலகிருஷ்ணன்
சென்னை: லோக்சபா எம்.பி. சு.வெங்கடேசனை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு ஒருமையில் பேசியது அரசியல் நாகரீகமற்றது என்று சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை அமைச்சர் நேரு சந்தித்தார். அப்போது மதுரை பெரியார் பேருந்து நிலைய விரிவாக்கம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கே.என்.நேரு, முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் பெரியார் பேருந்து நிலையத்தை திறந்து வைப்பார் என்றார்.

நேருவின் ஷாக் பதில்
இதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலைய விரிவாக்கம், எய்ம்ஸ் மருத்துவமனை வளாகம் ஆகியவை தொடர்பாகவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு கிண்டலாகவே, சம்பந்தப்பட்டவர்களை விட்டு என்னிடம் வந்து கேட்கிறீர்கள். மதுரையில் வெங்கடேசன் என்ற எம்.பி. ஒருவன் இருக்கிறான், அவனிடம் கேளுங்கள் என்று அமைச்சர் நேரு பதிலளித்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

வைரலான நேருவின் பேட்டி
அமைச்சர் நேருவின் இந்த பேட்டி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. சீனியர் அமைச்சரான கே.என்.நேரு பொதுவெளியில் இப்படி பேசுவதை திமுக தலைமை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்கிற குரல்கள் வலுத்து வருகின்றன. கடந்த காலங்களிலும் கே.என்.நேரு இதுபோன்ற பேச்சுகளை பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் நேரு என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

சிபிஎம் கடும் எதிர்ப்பு
அமைச்சர் நேருவின் பேச்சுக்கு மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான ஊடகங்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், தோழர் சு.வெங்கடேசன் எம்.பி. குறித்து ஒருமையில் பேசியிருப்பது அரசியல் நாகரீகமற்றது. பொதுவாழ்வில் இருப்போர் நிதானத்துடன் பேசுவதையே மக்கள் விரும்புவார்கள், ஏற்பார்கள் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுகவுக்கு தர்ம சங்கடம்
மக்களின் பிரதிநிதியான சு.வெங்கடேசன் எம்.பி., தமிழக நலன் சார்ந்து மத்திய அரசுடன் போராடி வருகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் உள்ளிட்ட பதவிகளில் இருந்தவர். தமிழக மக்களுக்காக குரல் கொடுத்து வரும் சு.வெங்கடேசன் எம்.பி.யை அமைச்சர் நேரு இப்படி பகிரங்கமாக ஒருமையில் பேசியது திமுகவினரை தர்ம சங்கடத்துக்குள்ளாக்கி இருக்கிறது என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
-
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications