மோடி அரசின் 100 நாள் சாதனை என்ன.. முத்தரசன் அறிக்கை!
Recommended Video
சென்னை: மோடி பிரதமராக மீண்டும் பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகிய நிலையில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளையும், நீதிபதிகளையும் ராஜினாமா செய்ய வைத்ததே, அவரது சாதனை என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
மத்தியில் பாஜக அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்று 100 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். பொருளாதார மந்தநிலையால் தொழில்நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு எல்லாம் மூடுவிழா நடைபெற்று வருவாதகாவும் இதுவும் மோடி அரசின் 100 நாள் சாதனைகளில் ஒன்று என விமர்சித்துள்ளார்.

கருத்துச்சுதந்திரம் மறுக்கப்படுவதுடன் ஜம்மு காஷ்மீரில் மக்கள் திறந்த வெளிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், பத்து மாதம் சுமந்து பெற்ற தாயைக் காணக்கூட நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் அரசியல் கட்சித் தலைவர்களை காவலில் வைத்து பூட்டிவிட்டு தன்னை தானே மோடி அரசு பாராட்டிக்கொள்வதாக சாடியுள்ளார்.
மத்திய அரசின் போக்கு பிடிக்காமல் மனசாட்சிக்கு மதிப்பளித்து தொடர்ந்து ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளும், நீதிபதிகளும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருவதாகவும், அவர்களை ராஜினாமா செய்ய வைத்ததும் மோடி அரசின் 100 நாள் சாதனைகளில் ஒன்று என விமர்சித்திருக்கிறார்.
அதிகாரிகள் ராஜினாமா செய்யும் அபாய நிலையை உணர்ந்து மத்திய பாஜக அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் என முத்தரசன் தமது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications