Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“வரலாற்றைப் படிங்க மிஸ்டர் விஜய்..” தவெக தலைவர் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் சண்முகம் பதிலடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "மக்கள் நலனுக்காக தியாகம் செய்வது என்றால் என்ன என்பதை அறிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள் மிஸ்டர் விஜய்" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் நேற்று அரியலூரில் பிரச்சாரத்தின்போது பேசியதற்கு சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினார். அப்போது முதல் திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் விஜய், 2026ல் தவெக தான் ஆட்சிக்கு வரும் என்று பேசி வருகிறார். அத்துடன், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் தவெக இடையில்தான் போட்டி என்றும் அவர் கூறி வருகிறார். இந்த நிலையில் விஜய் திருச்சியில் நேற்று தனது பரப்புரையைத் தொடங்கினார். திருச்சி மரக்கடையில் பரப்புரை செய்த அவர், திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.

CPIM Leader P Shanmugam Tells Vijay to Read Communist Leaders Biographies to Learn About Sacrifice

அதன்பிறகு அரியலூர் சென்ற விஜய், மக்கள் மத்தியில் பேசினார். அப்போது, "இங்கு கூடியுள்ள மக்களின் அன்புக்காக எவ்வளவு பெரிய உயரத்தையும், எவ்வளவு பெரிய வருமானத்தையும் வசதியையும் தூக்கி எறிந்துவிட்டு வரலாம். உங்களது அன்பு, பாசத்தை விட உலகில் எனக்கு எதுவுமே பெரிதில்லை. உங்கள் வீட்டில் ஒருவனாக, உறவினராக என்னை மாற்றிவிட்டீர்கள். என்னங்க பெரிய பணம்? போதும் என்ற அளவுக்கு பணத்தைப் பார்த்துட்டேன். அரசியலுக்கு வந்துதான் நான் பணம் சம்பாதிக்க வேண்டுமா என்ன? அதற்கு கொஞ்சம் கூட அவசியமில்லை. எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த உங்களுக்காக உழைப்பதைத் தவிர வேறு எந்த எண்ணமும் வேலையும் எனக்கு இல்லை." எனப் பேசினார் விஜய்.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் பேச்சைக் குறிப்பிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார். மக்கள் நலனுக்காக தியாகம் செய்வது என்றால் என்ன என்பதை அறிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள் எனத் தெரிவித்துள்ளார் பெ.சண்முகம்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தவெக தலைவர் விஜய் 'அரசியலுக்கு வந்து தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை' என்பதை ஏதோ அவர் மிகப்பெரிய தியாகம் செய்வதைப் போல ஊடகங்களும் அதை பெரிது படுத்தியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்கள் பல்லாண்டு காலம் முதல்வராக இருந்த இ.எம்.எஸ், ஜோதி பாசு, நிரூபன் சக்கரவர்த்தி, தசரத் தேவ், இ.கே. நாயனார், மாணிக் சர்க்கார், புத்ததேவ் பட்டாச்சாரியா, வி.எஸ் அச்சுதானந்தன் இவர்கள் அனைவரும் அரசியலில் 60, 70 ஆண்டு காலத்திற்கு மேலாக மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள்.

பதவியை பயன்படுத்தி பணம் சம்பாதித்தார்கள் என்று எதிரிகளால் கூட குற்றம் சாட்ட முடியாதவர்கள். அது மட்டுமல்லாமல் இ.எம்.எஸ், பி.சுந்தரைய்யா, ஹர்கிசன்சிங் சுர்ஜித் இவர்கள் அனைவரும் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக சிறப்பாக செயல்பட்டவர்கள். தங்கள் குடும்பத்திலிருந்து தங்களுடைய பங்காக கிடைத்த சொத்துக்களை கட்சிக்கு வழங்கியவர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்வது தான் கம்யூனிஸ்ட்களின் அரசியல். பணம் சம்பாதிக்காமல் இருப்பதல்ல. வரலாற்றை படியுங்கள் மிஸ்டர் விஜய். அதிலும் மக்கள் நலனுக்காக தியாகம் செய்வது என்றால் என்ன என்பதை அறிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+