கசியும் கச்சா எண்ணெய்.. எண்ணூரில் துர்நாற்றம்.. மூச்சு விடவே சிரமம்.. களமிறங்கிய விஜய் ரசிகர்கள்
சென்னை: மழை வெள்ள நீர் சூழ்ந்துள்ள எண்ணூரில் கழிவு நீரும் மழை நீரும் கலந்து கச்சா எண்ணையும் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மிக்ஜாம் புயல் சென்னையை சூறையாடி விட்டது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் குடியிருப்புகளை வெள்ளநீர் மூழ்கடித்துள்ளது.

பெட்ரோலியம் தொழிற்சாலைகளில் மழைநீர் சூழ்ந்து இருப்பதால் அங்கிருந்து கச்சா எண்ணெய் கசிந்து வருவதால் எண்ணூர் முகத்துவாரம் நிறம் மாறிக் காட்சி அளிக்கிறது. தேங்கியுள்ள வெள்ளநீரில் ஏற்கனவே கழிவு நீர் கலந்துள்ள நிலையில், தற்போது கச்சா எண்ணெய்யும் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.
எண்ணூர் பகுதிகளில் தேங்கியுள்ள நீரில் எண்ணெய் கலப்பதாக இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ எண்ணூர் cpcl அருகே இந்த கொடுரம். இந்த oil நம் பார்வையில் படுவதால் தெரிகிறது. ஆனால் இந்த மாதிரி நிலைமையை பயன்படுத்தி காற்றில் விஷவாயுக்களையும் கலந்து விட்டுள்ளனர் என்று பதிவிட்டுள்ளார் மோகன் ஜி.
எண்ணூர் cpcl அருகே இந்த கொடுரம்.. இந்த oil நம் பார்வையில் படுவதால் தெரிகிறது.. ஆனால் இந்த மாதிரி நிலைமையை பயன்படுத்தி காற்றில் விஷவாயுக்களையும் கலந்து விட்டுள்ளனர்.. இந்த பக்கம் ஒரு முறை வந்து சுவாசித்து பார்த்தால் புரியும்.. வாழ்த்துகள் இந்த விஜய் மக்கள் இயக்க நண்பர்களுக்கு.. pic.twitter.com/EWukIUcWwT
— Mohan G Kshatriyan (@mohandreamer) December 7, 2023
இந்த பக்கம் ஒரு முறை வந்து சுவாசித்து பார்த்தால் புரியும். வாழ்த்துகள் இந்த விஜய் மக்கள் இயக்க நண்பர்களுக்கு." என பதிவிட்டுள்ளார். இதனுடன் சேர்த்து வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர் அப்பகுதி மக்களுக்கு உணவு கொடுப்பதற்காக இடுப்பளவு தண்ணீரில் இறங்கி பயணம் செய்கிறார். அதில் கச்சா எண்ணெய் கலந்து இருப்பதால் அப்பகுதியே கருப்பாக காட்சி அளிக்கிறது.
அந்த வீடியோவில் பேசிய அந்த நபர், “தண்ணீர் கேட்டாங்கன்னு எடுத்துட்டு வந்தோம். இங்க பாருங்க எவ்வளவு கெமிக்கல் மிதக்குதுன்னு, எத்தனை வீடுகள் இருக்கு யாரும் இங்க இருக்குற மக்களை கண்டுக்கல. இங்க இருக்குற மக்கள் எனக்கு போன் பண்ணாங்க, நாங்க விஜய் மக்கள் இயக்கத்துல இருக்கோம். எப்பையாச்சும் ஹெல்ப்ன்னு கேட்டாங்கன்னா, நாங்க ஓடோடி வந்து செய்வோம். இன்னைக்கும் கூப்டாங்க வந்துருக்கோம். ” என தெரிவித்திருந்தார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications