டெடிபேர் உண்டியலுடன் வந்து எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் முன்னிலையில்.. உதயநிதியிடம் நிதி கொடுத்த சிறுமி
சென்னை: கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தன்னுடைய உண்டியல் சேமிப்பை அப்படியே உண்டியலோடு கொண்டு வந்து எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்தார். வேளாண்மைத்துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சசர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்தது.
Recommended Video
சிறுமியின் செயலால் நெகிழ்ந்த உதயநிதி ஸ்டாலின் சிறுமியை வெகுவாக பாராட்டினார். தமிழகத்தில் கொரோனா தொற்று நிவாரணத்திற்காக தாராளமாக நிதி வழங்குங்கள் என முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடம் கேட்டார். இதையடுத்து ஏராளமானோர் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.
நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர், தொழிலதிபர்கள் என பல தரப்பினரும் நிதி வழங்கி வருகிறார்கள்.
சேமிப்பு பணம்
அந்த வகையில் சிறு குழந்தைகளும் தங்களின் சேமிப்பு பணத்தை நிவாரண நிதியாக முதல்வர் ஸ்டாலினிடமும் சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினிடமும் கொடுத்து வருகிறார்கள். சைக்கிள் வாங்குவதற்காக சேர்த்திருந்த காசு, பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஆகும் செலவு, உண்டியல் பணம் என கொடுத்து அவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார்கள்.
நலத்திட்ட உதவிகள்
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகளை வழங்க எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சென்றிருந்தார். அப்போது வடலூரைச் சேர்ந்த சாகுல் ஹமீத்- பரக்கத் நிஷா தம்பதியின் மகள் அஃபினா பாத்திமா நிகழ்விடத்திற்கு வந்தார்.
உண்டியல் சேமிப்பு
அப்போது தனது உண்டியல் சேமிப்பை கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு உதயநிதியிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். அவரது முன்னிலையில்தான் சிறுமி தனது பெரிய மனதை வெளிப்படுத்தி அனைவரையும் அசர வைத்தார்.
அசத்தும் எம்ஆர்கே பன்னீர் செல்வம்
அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர் செல்வம் கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். நிவாரண நிதியை ஊக்குவிக்கவும் செய்கிறார். கொரோனா தடுப்பு பணிகளுக்கு அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் மிகவும் உதவியாக இருந்து வருகிறார்.
சிறுமி
இந்த நிகழ்ச்சியில் அந்த சிறுமி உண்டியலுடன் கொடுத்த பணத்தை பெற்ற உதயநிதி சிறுமியை வெகுவாக பாராட்டினார். குழந்தைகள் ஒரு ரூபாய் நிவாரணமாக கொடுத்தாலும் அதை பாராட்டி அவர்களை அரசு ஊக்குவிக்கிறது. இது பல சிறுவர்கள், சிறுமிகளுக்கு உதவும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா சுப்பிரமணியன், சிவி கணேசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இளைஞர்கள்
வருங்கால பாரதம் இளைஞர்கள் கையில் என்ற கூற்றுக்கேற்ப இந்த சிறுவர்கள் சமூக பொறுப்புணர்வை உணர்ந்து இவ்வாறு செய்து வருவது அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படுகிறது. இவர்கள் கொடுக்கும் உதவி, பெரியவர்களையும் நிதியுதவி அளிக்க தூண்டுகிறது.