தாய்லாந்திலிருந்து சென்னை வந்த விமான பயணியிடம் ரூ 10 கோடி உயர் ரக கஞ்சா பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 10 கிலோ எடை கொண்ட ரூ 10 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கஞ்சா கடத்தியதாக வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் உள்ள பயணிகளின் உடைமைகளை சுங்கவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வடமாநில பயணி ஒருவர் இருந்தார். அவரது உடைமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது உணவு பாக்கெட்டுகள் இருந்தன.
அதை சோதனை செய்த போது 10 கிலோ எடை கொண்ட ரூ. 10 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பயணி கைது செய்யப்பட்டார். அந்த கஞ்சாவை பெறுவதற்காக காத்திருந்த நபரை சுங்கத் துறையினர் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications