சைபர் பிரிவு கண்காணிக்கிறது: ஹெலிகாப்டர் விபத்து: தவறாக பதிவிட்டால் சட்ட நடவடிக்கை போலீஸ் எச்சரிக்கை
ஹெலிகாப்டர் விபத்து குறித்து பொது அமைதியை குலைக்கும் வகையில் பதிவிடுவோர் மீது சட்ட நடவடிக்கை பாயும் என காவல் துறை எச்சரித்துள்ளது.
ஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்தி பரப்புவது, தவறாக பதிவு செய்வதை சைபர் க்ரைம் போலீஸார் கண்காணிக்கிறார்கள், தவறாக பதிவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பலி
ஊட்டி வெலிங்டன் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வந்த முப்படை தளபதி அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்கள். விபத்து குறித்து ஆய்வு நடத்த கருப்புப் பெட்டியை தேடி கண்டுபிடித்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்த முப்படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விமானப்படை அதிகாரி ஒருவரை நியமித்துள்ளனர். அதேபோல் தமிழக காவல்துறையில் ஏடிஎஸ்பி அதிகாரி நியமிக்கப்பட்டு விசாரணை தொடங்கியது.

உடல் அடக்கம் முன்னரே தொடங்கிய வதந்திகள்
பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் என வதந்திகள் பல கிளப்பி விடப்பட்டன, சமூக வலைதளங்களில், வாட்ஸ் ஆப் களில் சுடப்பட்டதால் விபத்து என்றெல்லாம் பரப்பினர். ஆனால் நிபுணர்கள் அந்த ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்த முடியாது என விளக்கம் அளித்தனர். இன்னும் சிலர் சீன சதி, நக்சல் சதி, அமெரிக்க கோபம் என்றெல்லாம் வதந்திகளை பரப்பினர்.

விசாரணை முடியும் முன்னரே நச்சுக்கருத்துகள்
விபத்து நடந்ததற்கான காரணம் என்னவென்பதை அதுகுறித்து நடத்தப்படும் விசாரணை, தடயவியல் விசாரணை உள்ளிட்ட பல விஷயங்களுக்குப்பின் வெளிவரும். பல விசாரணை அமைப்புகள் மிகுந்த சிரமத்துக்குப்பின் கண்டுபிடிக்கும் முடிவை சிலர் எளிதாக மனம் போன போக்கில் இதுதான் காரணம் என பதிவிடுவதும், சமூக வலைதளங்களில் வரும் கருத்துகளை ஆதரித்து பதிவிடுவதும் சமூகத்தில் பதற்றத்தை அதிகரித்துவிடும்.

சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் பதிவுகள்
சிலர் தமிழக மக்களைப்பற்றியும், சில குறிப்பிட்ட கட்சிகள் குறித்தும் சில குறிப்பிட்ட கட்சிகளுக்கு ஆதரவாகவும், சில பிரிவினைவாத கருத்துகளை குறிப்பிட்டும் சமூக பதற்றம் ஏற்படுத்தும் விதத்தில் பதிவிடுகின்றனர். இதனால் தேவையற்ற சட்டம் ஒழுங்கு கெடும் சூழல் உருவாக வாய்ப்புள்ளது என்பதால் போலீஸார் எச்சரிக்கையாக வெளியிட்டுள்ளனர்.

கண்காணிக்கும் சைபர் க்ரைம், உளவுத்துறை போலீஸ்
சமூக வலைதளங்களில் பதற்றமான கருத்தை வெளியிட்ட மாரிதாஸ் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் மீது 153, 505(2) உள்ளிட்ட வழக்குகள் தொடரப்பட்டது. இதேப்போன்று பலரும் ட்விட்டர், ஃபேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதற்றமான கருத்துகளை பரப்புகின்றனர். இவைகளை சைபர் க்ரைம், நுண்ணறிவு, உளவுத்துறை போலீஸார் கண்காணிக்கிறார்கள்.
Recommended Video

கைது நடவடிக்கை, சிறை நிச்சயம்
ஆகவே இதுகுறித்த சமூக அக்கறை இல்லாமல் மனம் போன போக்கில் வதந்தி பரப்புவது, அவதூறு பரப்புவது, சர்ச்சையை கிளப்பும் பதிவுகளை செய்தால் கட்டாயம் சட்ட நடவடிக்கை உண்டு என காவல்துறை எச்சரித்துள்ளது. கைது நடவடிக்கை கட்டாயம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications