ஃபெஞ்சல் புயல்.. தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்தது தமிழக அரசு
சென்னை: ஃபெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அரசிதழிலில் வெளியிடபட்டுள்ளது. கடந்த நவம்பர் மாத இறுதியில் வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்தபோது விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் ஓயவில்லை. ஜனவரி மாதத்தில் பெரிதாக மழை பெய்யவில்லை. எனினும் நவம்பர் மற்றும் டிசம்பரில் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக கடந்த நவம்பர் மாத இறுதியில் ஃபெஞ்சல் புயல் வங்க கடலில் உருவானது. இந்த புயல் எதிர்பார்த்ததை விட மெதுவாக கரையைக் கடந்தது.

விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் கரையைக் கடந்த போது பேய் மழை கொட்டி தீர்த்தது. இதனால், இரண்டு மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதந்தன. இந்த புயல் மற்றும் வெள்ளத்தால் இரண்டு மாநிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை தீவிர பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தீவிர இயற்கை பேரிடராக அறிவித்ததன் மூலம், மாநிலத்திற்கு உட்பட்ட பேரிடர் நிதி மட்டுமின்றி இதர நிதிகளையும் பேரிடர் கால சீரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும் என சொல்லப்படுகிறது. விழுப்புரம்,கடலூரில் கோர பாதிப்பை ஏற்படுத்திய ஃபெஞ்சல் புயலால், பெரும் சேதம் ஏற்பட்டது. விவசாய நிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஃபெஞ்சல் புயலால் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது கணக்கெடுப்பில் தெரியவந்தது. இதையடுத்து மத்திய அரசு ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளுக்கு வேண்டிய நிதியை விடுவிக்குமாறு தமிழக அரசு கோரியது. எனினும் இதற்கு சாதகமான பதில் வராத நிலையே உள்ளது. இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் பாதிப்பை தீவிர பேரிடராக தமிழக அரசு இன்று அறிவித்து இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை துரை சார்பில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பேரிடர் நிதி மட்டும் இன்றி பிற நிதிகளையும் சீரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்த முடியும். ஃபெஞ்சல் புயல் பாதிப்பினால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி , தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களிலும் பாதிப்பு ஏற்பட்டது. புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ரூபாயை தமிழக அரசு இழப்பீடாக அறிவித்தது. இந்த நிலையில், தான் தற்போது தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்துள்ளது தமிழக அரசு.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications