அப்பாடா.. தீவிர புயலாக கரையை கடந்த கஜா, வலு குறைந்த புயலாக மாறியது: வானிலை ஆய்வு மையம்
Recommended Video
சுழன்றடிக்கும் புயல் காற்று | வலு குறைந்த புயலாக மாறியது | உள்மாவட்டங்களில் பலத்த மழை- வீடியோ
சென்னை: தீவிர புயலாக கரையை கடந்த கஜா தற்போது வலு குறைந்த புயலாக மாறியுள்ளது.
கஜா புயலானது தீவிர புயலாக மாறி இன்று அதிகாலை நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது. அதன் முழு பகுதியை கரையை கடப்பதற்கு காலை 9 மணி வரை ஆகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
காலை 5.30 மணி அளவில் அதிராம்பட்டினத்தில் வடமேற்கே பத்து கிலோமீட்டர் தொலைவில் புயலின் இறுதிப்பகுதி தென்பட்டது.
தீவிர புயலாக கரையை கடந்த கஜா, காலை 7.45 மணி அளவில் வலு குறைந்த புயலாக மாறி உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கக்கூடும் என்றும் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதிகமான காற்று வீசிய அதிராம்பட்டினம் சேத வீடியோ#GajaCycloneUpdates #CycloneGaja pic.twitter.com/66V0XH0shn
— Oneindia Tamil (@thatsTamil) November 16, 2018
English summary
Rain will lash in cyclone Gaja path in Tamilnadu for next 24 hours.