புயல் பாதிப்பு நிதி கோர இன்று டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி
முதல்வர் இன்று மாலை டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
Recommended Video

சென்னை: புயல் பாதிப்புக்கு மத்திய அரசிடம் நிதி கேட்பதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லிக்கு செல்ல உள்ளார். வியாழக்கிழமை அதாவது நாளை காலை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசுகிறார்.
கஜா புயலுக்கு நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர் கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. சுழன்று வீசிய கஜா 50-க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கி சென்றது.
இதில் குடிசைகள் பறந்தன.. பயிர்கள் நீரில் மூழ்கின. எண்ணற்றோர் வீடு, வாசல் இன்றி மட்டுமல்லாமல், தண்ணீர், உணவின்றியும் இன்னமும்கூட தவித்து வருகிறார்கள்.

ஆய்வுக்கூட்டம்
தற்போது தமிழக அரசு, தனியார் அமைப்புகள் உள்ளிட்ட தனிப்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்வந்து உதவி கொண்டிருக்கிறார்கள். நேற்று முன்தினம் கூட எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

நேரில் ஆய்வு
இந்த கூட்டத்தில் புயல் பாதிப்பு குறித்தும், மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முதல்வர் பழனிசாமி, புயல் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

புயல் பாதிப்பு விவரங்கள்
இந்த நிலையில், இன்று காலை மீண்டும் முதலமைச்சர் ஆலோசனை கூட்டம் ஒன்றினை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்களும், அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர். அப்போது புயல் பாதிப்பு, சேதத்தின் மொத்த மதிப்பு குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்று தயார் செய்யப்பட உள்ளது

டெல்லி பயணம்
இந்த பட்டியலை முதலமைச்சர் பிரதமரிடம் நேரில் தர உள்ளார். இதற்காக இன்று மாலை முதல்வர் டெல்லிக்கு விமானம் மூலம் செல்ல உள்ளார். நாளை காலை பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுவதுடன், புயல் சேதம் பற்றிய இடைக்கால அறிக்கையையும் பிரதமரிடம் தர இருக்கிறார்.

மத்திய குழு
அதன்பின்னர் தமிழகத்துக்கு உடனடியாக நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்றும், புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய குழு ஒன்றையும் உடனே அனுப்பி வைக்குமாறும் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுக்க உள்ளார். பிரதமருடனான தமது சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் அன்றைய தினமே முதல்வர் முழு விவரங்களை தெரிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications