Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 நாட்கள் விடுமுறைக்கு பின்.. மீண்டும் கூடும் தமிழ்நாடு சட்டசபை.. இன்றும் பட்ஜெட் மீதான விவாதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபை இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூடுகிறது. இன்றும் பட்ஜெட் மீதான விவாதம் தொடர உள்ள நிலையில், நாளை பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசும் உறுப்பினர்களுக்கு பதில் அளித்து, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேச உள்ளார்.

தமிழ்நாடு சட்டசபை கடந்த 20ம் தேதி கூடியது. அன்றைய தினம் 2023-24ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இதையடுத்து 21ஆம் தேதி 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

சட்டசபை கூட்டத்தொடர்

சட்டசபை கூட்டத்தொடர்

இதைத் தொடர்ந்து 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பொது பட்ஜெட், வேளாண்மை பட்ஜெட் ஆகிய 2 பட்ஜெட்கள் மீது விவாதம் நடந்தது. இதனிடையே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதேபோல் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். தொடர்ந்து சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்பதால் 2 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டது.

மீண்டும் கூடும் சட்டசபை

மீண்டும் கூடும் சட்டசபை

இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டசபை மீண்டும் கூடுகிறது. காலை 10 மணிக்கு சட்டசபை கூடியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படும். எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து பேச உள்ளனர். தொடர்ந்து 2 பட்ஜெட்கள் மீதான விவாதம் நடைபெறும். நாளை பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலுரை வழங்க உள்ளனர்.

மானியக்கோரிக்கை

மானியக்கோரிக்கை

மேலும் 2023-2024ஆம் ஆண்டு செலவினத்திற்கான முன்பண மானியக்கோரிக்கையும், கூடுதல் செலவிற்கான மானியக்கோரிக்கை பேரவையில் வைக்கப்படும். தொடர்ந்து 29ஆம் தேதி முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை துறை வாரியாக மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. முதலாவதாக வரும் 29ஆம் தேதி காலையில் நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மானியக்கோரிக்கையும், பிற்பகலில் போக்குவரத்து மானியக்கோரிக்கையும் நடக்கிறது.

புதிய அறிவிப்புகள்

புதிய அறிவிப்புகள்

30ஆம் தேதி உள்ளாட்சி துறையும், ஊரக வளர்ச்சி துறையும், 31ஆம் தேதி உயர்கல்வி, பள்ளிக்கல்வி துறையும், ஏப்ரல் 1ஆம் தேதி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக் கோரிக்கையும் நடைபெற உள்ளது. ஒவ்வொரு மானியக்கோரிக்கை அன்றும் மானியக்கோரிக்கைகளை தாக்கல் செய்து, புதிய அறிவிப்புகளை துறை சார்ந்த அமைச்சர்கள் வெளியிடுவார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+