2 நாட்கள் விடுமுறைக்கு பின்.. மீண்டும் கூடும் தமிழ்நாடு சட்டசபை.. இன்றும் பட்ஜெட் மீதான விவாதம்!
சென்னை: தமிழ்நாடு சட்டசபை இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூடுகிறது. இன்றும் பட்ஜெட் மீதான விவாதம் தொடர உள்ள நிலையில், நாளை பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசும் உறுப்பினர்களுக்கு பதில் அளித்து, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேச உள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை கடந்த 20ம் தேதி கூடியது. அன்றைய தினம் 2023-24ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இதையடுத்து 21ஆம் தேதி 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

சட்டசபை கூட்டத்தொடர்
இதைத் தொடர்ந்து 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பொது பட்ஜெட், வேளாண்மை பட்ஜெட் ஆகிய 2 பட்ஜெட்கள் மீது விவாதம் நடந்தது. இதனிடையே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதேபோல் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். தொடர்ந்து சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்பதால் 2 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டது.

மீண்டும் கூடும் சட்டசபை
இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டசபை மீண்டும் கூடுகிறது. காலை 10 மணிக்கு சட்டசபை கூடியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படும். எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து பேச உள்ளனர். தொடர்ந்து 2 பட்ஜெட்கள் மீதான விவாதம் நடைபெறும். நாளை பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலுரை வழங்க உள்ளனர்.

மானியக்கோரிக்கை
மேலும் 2023-2024ஆம் ஆண்டு செலவினத்திற்கான முன்பண மானியக்கோரிக்கையும், கூடுதல் செலவிற்கான மானியக்கோரிக்கை பேரவையில் வைக்கப்படும். தொடர்ந்து 29ஆம் தேதி முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை துறை வாரியாக மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. முதலாவதாக வரும் 29ஆம் தேதி காலையில் நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மானியக்கோரிக்கையும், பிற்பகலில் போக்குவரத்து மானியக்கோரிக்கையும் நடக்கிறது.

புதிய அறிவிப்புகள்
30ஆம் தேதி உள்ளாட்சி துறையும், ஊரக வளர்ச்சி துறையும், 31ஆம் தேதி உயர்கல்வி, பள்ளிக்கல்வி துறையும், ஏப்ரல் 1ஆம் தேதி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக் கோரிக்கையும் நடைபெற உள்ளது. ஒவ்வொரு மானியக்கோரிக்கை அன்றும் மானியக்கோரிக்கைகளை தாக்கல் செய்து, புதிய அறிவிப்புகளை துறை சார்ந்த அமைச்சர்கள் வெளியிடுவார்கள்.
-
சிஸ்டமே மாறப்போகுது.. சென்னையின் போக்குவரத்தையே தடம் தெரியாமல் மாற்ற போகும்.. தங்கமான பிளான் -
பச்சைத் துண்டு எடப்பாடி பழனிசாமி ஒரே போடு.. நிலமே இல்லாமல் விவாதமாகும் அசையா சொத்து விவரம் -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக்












Click it and Unblock the Notifications