மக்கள் மனதில் தாக்கம்! ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.க்கு தண்டனை? பரிசு? கூடிப் பேசும் சாமானியர்கள்!
சென்னை: சுகாதாரத்துறை செயலாளர் பதவியிலிருந்து கூட்டுறவுத் துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். மாற்றப்பட்டது பற்றித் தான் பட்டித்தொட்டி எங்கும் இப்போது ஒரே பேச்சாக உள்ளது.
அந்தளவுக்கு அரசியல்வாதிகளுக்கு இணையாக வெகுஜன மக்கள் மத்தியில் பரிச்சயம் பெற்றவராக திகழ்கிறார் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.
அரசுத்துறை செயலாளர்களிலேயே சாமானியர்கள் மனதிலும் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அதிகாரியாக இருக்கிறார் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.

டிரான்ஸ்ஃபர்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் நடைபெற்ற நிலையில் அதில் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். டிரான்ஸ்பர் மட்டும் கூடுதல் கவனம் ஈர்த்திருந்தது. சுகாதாரத்துறையில் இருந்து அவர் கூட்டுறவுத்துறைக்கு மாற்றப்பட்டது ஏன், அதன் பின்னணி என விவாதங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. இந்த இடமாற்றம் அவருக்கு தண்டனையா அல்லது பரிசா என டீக்கடைகளில் கூட தினசரி நாளிதழ்களை வைத்துக் கொண்டு பட்டிமன்றங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன.

நட்பு பாராட்டியவர்
அந்தளவுக்கு கொரோனா பற்றி பேசி பேசி ஊடகங்கள் மூலம் அவர் மக்கள் மத்தியில் பரிச்சயம் பெற்றிருக்கிறார். தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிலேயே மிக அதிகளவில் பேட்டிகள் கொடுத்த பெருமையும் ராதாகிருஷ்ணனையே சேரும். எந்தவொரு கேள்விக்கும் தடுமாற்றமின்றி பதில் தரக்கூடிய திறமையை பெற்றிருந்தவர். பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஊடகத்தினரை சந்திக்கவே அச்சப்படும் சூழலில், ஊடகத்தினருடன் நட்பு பாராட்டியவர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.

எதிர்பார்க்கப்பட்ட இடமாற்றம்
இந்நிலையில் இப்போது நடைபெற்றுள்ள இந்த இடமாற்றத்தால் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.க்கு எந்த கவலையும் இல்லையாம். இன்னும் சொல்லப்போனால் தன்னை சுகாதாரத்துறையில் இருந்து வேறு துறைக்கு அரசு மாற்றாதா என அவரே எதிர்பார்த்து காத்திருந்ததாக கூறுகிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கொரோனா.. கொரோனா.. எனப் பேசி மருந்து, மாத்திரை, தடுப்பூசி, என நிற்க நேரமின்றி பரபரப்பாகவே ஓடிக்கொண்டிருந்ததால் அவருமே ஒரு மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருந்திருக்கிறார்.
Recommended Video

டிரான்ஸ்பர் பரிசு
இதனால் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.ஸை பொறுத்தவரை கூட்டுறவுத்துறைக்கு தன்னை டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டதை தனக்கு கிடைத்த பரிசாகவே கருதுகிறாராம். ஆனால் அதற்குள் இந்த இடமாற்றத்தை வைத்து ஆளுக்கொரு தலைப்பில் தங்கள் கருத்துக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications