பெரியார் நினைவு நாள் பதிவுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்ட தமிழ்நாடு சீமான், கர்நாடகா டிகே சிவகுமார்!
சென்னை: தந்தை பெரியார் 50-வது நினைவு தினத்தை முன்னிட்டு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் ஆகியோர் மிக கடுமையான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் எதிர்கொண்டனர்.
தமிழ்நாட்டின் 'தந்தை'யாக போற்றப்படுகிறவர் பெரியார். தந்தை பெரியார் என்ற பெயரை உச்சரிப்பதே இன்றும் 'ஆதிக்கம் செலுத்தும்' சக்திகளுக்கு ஒவ்வாமையாக இருந்து வருகிறது. தந்தை பெரியார் வாழ்ந்த காலத்திலும் கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டார். அவர் மறைந்து அரை நூற்றாண்டு ஆன போதும் கடும் எதிர்ப்புகளை சந்திக்கிறார். தந்தை பெரியார் மறைந்த போதும் அவரது சித்தாந்தங்கள் இன்னமும் வீச்சாகவும் பேசு பொருளாகவும் விவாதப் பொருளாகவும் இருந்து வருகிறது.

தந்தை பெரியாரின் 50-வது நினைவு நாள் டிசம்பர் 24. இதனை ஒட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது எக்ஸ் பக்கத்தில், மானமும், அறிவும் மனிதருக்கு அழகு என்று போதித்த பெருந்தகை! பெண்ணிய உரிமை, சாதி ஒழிப்பு, சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு இந்தக் களங்களில் சற்றும் சமரசமின்றிப் போராடிய போற்றுதற்குரிய வழிகாட்டி ஐயா பெரியார் அவர்களின் நினைவைப் போற்றுவோம் என பதிவிட்டிருந்தார். நாம் தமிழர் கட்சியின் மேடைகளில் பெரியார் புரட்சியாளரே அல்ல என பேசி வரும் சீமான், பெரியார் நினைவு நாளை முன்னிட்டு பதிவிட்டிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் சீமானின் நாம் தமிழர் கட்சியினரோ மிக கடுமையாக இந்த பதிவுக்காக அவரை விமர்சித்திருந்தனர். இந்த ஒரு பதிவுக்காக மட்டும் உங்களை திட்டுகிறோம் என தொடங்கி மிக மிக கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி சீமானுக்கு எதிராக பதிவிட்டிருந்தனர் நாம் தமிழர் தம்பிகள்.

இதேபோல கர்நாடகா மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும் அம்மாநில துணை முதல்வர் டிகே சிவகுமாரும் தந்தை பெரியார் நினைவு நாளை முன்னிட்டு தமது எக்ஸ் பக்கத்தில் கன்னட மொழியில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பாஜகவினர் கடுமையாக கண்டித்திருந்தனர். மேலும் மடாதிபதிகளுடன் டிகே சிவகுமார் இருக்கும் படங்களையும் பகிர்ந்து அவரை விமர்சித்திருந்தனர்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை!












Click it and Unblock the Notifications